Sunday, April 11, 2021

உங்களோடு நிற்பவர்கள் யார் அன்புமணி?

 


படித்தவர்கள் யாரும் திருமாவளவனோடு நிற்கவில்லை என்று சின்ன டாக்டரய்யா கூறியுள்ளார்.

"திருமாவோடு யாரும் நிற்கவில்லை".
-ஆமாம், தோழமையுடன் அருகருகாய் அமர்ந்திருக்கிறோம்.

என்று தோழர் ஆதவன் தீட்சண்யா எதிர்வினையை துவக்க முகநூல் முழுதுமே சின்ன டாக்டருக்கான எதிர்வினைகளால் நிரம்பிக் கிடக்கிறது.

சரி மிஸ்டர் அன்புமணி, உங்களோடு நிற்பவர்கள் யார்?

உங்களால் ஜாதி வெறியேற்றப்பட்டு

மரம் வெட்டுபவர்கள், குடிசை கொளுத்துபவர்கள், கல்லெறிபவர்கள், குடிபோதையில் கொலை செய்பவர்கள் 

என்று உங்களால் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் ஏமாளிகள்தானே!

உங்களின் இந்த அறிக்கை கூட அந்த ஏமாளிகளை தொடர்ந்து ஏமாற்றுவதற்குத்தானே!

அனேகமாக மே இரண்டாம் நாள் தமிழகத்தின் மக்கள் உங்களை புறக்கணித்திருப்பார்கள் என்ற  உண்மையை உணர்வதற்கான நாளாக அமையும்.

அதன் பின்பாவது திருந்துங்கள், நீங்கள் நிஜமாகவே படித்தவராக இருந்தால்.

பிகு : மேலே உள்ள படம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் மகள் யாநிலா வரைந்தது.



No comments:

Post a Comment