Monday, March 30, 2020

மாட்டுக்குத்தான்யா அங்க மரியாதை


இந்த தலைப்பில் நான் எழுதத் தொடங்கியது வேறு ஒரு செய்தி பற்றி. 

டெல்லியிலிருந்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு 200 பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளதாக மொட்டைச் சாமியார் அறிவித்திருந்தார். 

வேலை இல்லாமல் வீட்டிற்கு திரும்பிய அவர்களிடம் பேருந்து கட்டணத்தை வசூலித்துத்தான் அழைத்து வந்திருக்கிறது யோகி அரசு. இதே நேரம் ராஜஸ்தான் அரசோ கொரோனோ ஸ்பெஷல் என்று கட்டணம் எதுவும் வாங்கவில்லை. 



வாழ வழியின்றி சொந்த ஊருக்கு கால் நடையாகவே திரும்பி வந்தவர்களிடம் எஞ்சியிருக்கிற பணத்தையும் தட்டிப் பறிக்கிற கொள்ளைக்காரக் கூட்டத்திற்கு உத்தரபிரதேசத்தில் ஆட்சி என்று பெயர். இந்த லட்சணத்தில் "எப்போதும் உங்கள் நண்பன்" என்று வேறு அச்சிட்டு வைத்துள்ளார்கள்.

இதைத்தான் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இதை விட பெரிய அராஜகத்தை, அயோக்கியத்தனத்தை செய்துள்ளது மொட்டைச்சாமியார் அரசு.

உத்தரபிரதேச எல்லைக்குள் வந்த தொழிலாளர்களை பெரெய்லி என்ற் இடத்தில் அமர வைத்து ப்ளீச்சிங் பௌடர் கலந்த தண்ணீரை அவர்கள் மீது பாய்ச்சி அவர்களை தூய்மைப்படுத்தியுள்ளார்களாம்.

ப்ளீச்சிங் பௌடர் கலந்த தண்ணீர் முகத்தின் மீதும் கண்கள் மீதும் உடல் முழுதும் பீய்ச்சப்பட்டதால் கண் எரிச்சல், உடல் நமைச்சல் போன்ற உபாதைகளுக்கு உள்ளாக்கியுள்ளனர். நோய்த் தொற்றை தடுப்பது என்ற பெயரில் புதிய நோய்களைக் கொடுத்துள்ளது மொட்டைச் சாமியார் அரசு. 




உபி மாநிலத்தில் மாடுகளாக இருப்பது மேல். மாட்டு மூளை கொண்டவர்கள் அல்லவா ஆட்சியில் உள்ளார்கள்! அவர்கள் மூளை முழுவதும் இருப்பது மாட்டுச் சாணம் அல்லவா!

No comments:

Post a Comment