Thursday, March 26, 2020

புளுகுவதற்கும் அளவில்லையா?

இரண்டு நாட்களுக்கு முன்பாக சமூக வலைத் தளங்களில் தீயாய் பரவிய ஒரு செய்தி கீழே.

"ஊரடங்கு உத்தரவை ரஷ்யாவில் அமலாக்க விளாடிமிர் புடீன் 500 சிங்கங்களையும் 800 புலிகளையும் அவிழ்த்து விட்டு விட்டார். அவை ரஷ்யாவின் சாலைகளில் திரிவதால் மக்கள் அஞ்சி வீட்டை விட்டு வெளியே வருவதில்லை"

இந்த செய்திக்கு ஆதாரமாக கீழே உள்ள படமும் பகிரப்பட்டது.


இது ரொம்பவே ஓவராக இருக்கே என்று தேடிப் பார்த்தால் 

ஆம். 

அது போலிச் செய்திதான்.

ரஷ்யாவில் இருப்பதே ஒட்டு மொத்தமாக 540 புலிகள்தான்.

ரஷ்யக்காடுகளில் சிங்கம் இருக்கிறதா என்று ஒரு மணி நேரம் இணையத்தில் தேடினாலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

சரி அந்த படம்?

தென் ஆப்பிரிக்க தலை நகர் ஜோஹனஸ்பர்க்கில் ஒரு மிருகக் காட்சி சாலையிலிருந்து தப்பி வந்த சிங்கம் அது.

என்னத்தான் பொய் என்றாலும் ஒரு அளவு கிடையாதா?

இந்த செய்தி ஒரு உண்மையை உணர்த்தியது.
சங்கிகள் பேடர்னை வெளி நாடுகளிலும் பின் பற்றுகின்றார்கள் . . .

No comments:

Post a Comment