Monday, March 23, 2020

இந்த நாளில், இந்த நாளில்தான் . ..


தேசத்தின் விடுதலைக்காக புரட்சிப்பாதையை தேர்ந்தெடுத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நடுங்க வைத்த புரட்சியாளர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று. . .

கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்று சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் மரணத்திற்கு அஞ்சாமல் மன் உறுதியோடு வாழ்ந்தவர்கள். என்றும் நமக்கு நல்லதொரு முன்னுதாரணமாக திகழ்பவர்கள்.

புரட்சியாளர்களுக்கு வீர வணக்கம் . . .

பிகு : வழக்கமாக காதலர் தினத்தன்று "காதலர் தினத்தை கொண்டாடுபவர்களே, இன்றுதான் பகத் சிங் தூக்கிலடப்பட்டார் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று சிலர் பதிவிடுவார்கள். 

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருடைய உண்மையான நினைவு நாள் மார்ச் 23 தான் என்று நாம் விளக்கினாலும் அடுத்த வருடமும் அதையே செய்வார்கள்.

ஆனால் மார்ச் 23 அன்றோ பகத்சிங்கை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

ஆமாம்

அவர்கள் நோக்கம் பகத்சிங்கை நினைவு கொள்வது அல்ல.
காதலர் தினத்தை சிறுமைப்படுத்துவது. 

No comments:

Post a Comment