Wednesday, March 11, 2020

அழிச்சிட்டு தாவி இருக்கலாம் . . .


காக்கிச்சட்டை அம்மணி கிரண் பேடி செய்த அதே தவறை ராஜ குடும்பத்து ஜோதிர்யாதித்திய சிந்தியாவும் செய்துள்ளார்.

கட்சி மாறுவதற்கு முன்பாக மாறப் போகும் கட்சியைப் பற்றி முக நூலிலோ அல்லது ட்விட்டரிலோ போட்ட பதிவுகளை அழித்து விட்டு தாவி இருக்கலாம்.

பாவம் அவகாசம் இல்லை. பதவியை பிடிக்கும் அவசரத்தில் முன்பு என்ன பேசினோம் என்பதையே மறந்து விடுகிறார்கள்.

ஆனால் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து மானத்தை வாங்கி விடுகிறார்கள் (அப்படியெல்லாம் இருக்கா என்ன? என்ற உங்கள் மைன்ட் வாய்ஸ் சத்தமாகவே கேட்கிறது) 

அப்படிப்பட்ட சில ஸ்க்ரீன் ஷாட்கள்  கீழே உள்ளது.

இவர்களுக்காகத்தான் வடிவேலு மகான் "அது வேற வாயி" என்ற மந்திரத்தை அருளி உள்ளார்.







பிகு : இந்த கட்சி மாறல் தொடர்பாக விரிவாக எழுத வேண்டும்.

No comments:

Post a Comment