Thursday, March 12, 2020

செந்தில் மட்டும்தான் புத்திசாலியா?




சரத் குமார் நடித்த நட்புக்காகப் படத்தில் முட்டாளாக கருதப்படும் செந்தில் அனுமான் மலையை தான் இரண்டு கைகளில் தூக்கிக் கொண்டு நிற்கப்போவதாக அறிவித்து பணம் வசூல் செய்வார். எல்லோரும் மலையைத் தூக்கி என் கையில் வையுங்கள், நான் இரண்டு கைகளில் தாங்கிக் கொண்டு நிற்கிறேன் என்பார். மக்கள் அவரை அடிக்கையில் சாமியார் வேடத்தில் வரும் கே.எஸ்.ரவிகுமார், “செய்ய முடியாத ஒன்றை செய்ய முடியும் என்று நம்ப வைத்த இந்த பையன் புத்திசாலி” என்று நம்ப வைத்த இந்த பையன் புத்திசாலி என்று தப்பிக்க வைப்பார்.

மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால், ஊடகங்கள் எழுச்சியை ஏற்பட வைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னவரும் செந்தில் போலவே புத்திசாலிதானே! எழுச்சியை உருவாக்க வேண்டிய பொறுப்பு உனக்கு கிடையாதா என்று ஊடகத்தினர் யாரும் கேள்வி கேட்கவில்லை.

கொள்கை என்றாலே தலை சுற்றியவருக்கு மயக்கமே வந்திருக்கும்.

செந்திலும் மலையை தூக்கவில்லை.
அவரும் அரசியலுக்கு வரப்போவதில்லை.

பாவம், நம்பியவர்கள்தான் ஏமாளிகள் . . . .

1 comment:

  1. என்ன செய்வது முட்டாள்களை நம்பித்தானே நாடு இருககிறது?

    தங்கள் பதிவில் `Page Break' தெரிவை பயன்படுத்தவும்.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது செந்தில் மட்டும்தான் புத்திசாலியா? பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete