Wednesday, March 25, 2020

மோடியின் கட்டுப்பாடு முதல்வருக்கு பொருந்தாதா?



நேற்று இரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதாக மோடி அறிவித்தார். மதம் தொடர்பான எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி கிடையாது என்றார். மரணமடைந்தவர்களின் இறுதி நிகழ்ச்சியில் கூட இருபது பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்பதும் ஒரு கட்டுப்பாடு. சாலை, ரயில், விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் ஊரடங்கு அமலான அடுத்த ஐந்தாவது மணி நேரத்தில் உ.பி முதல்வர் அயோத்தி செல்கிறார். தற்காலிக கொட்டகையில் இருந்த ராமர் சிலையை அங்கிருந்து எடுத்து வந்து இன்னொரு தற்காலிக இடத்தில் பூஜைகள் நடத்தி வைக்கிறார்கள்.

ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் இந்த மத நிகழ்வை மொட்டைச் சாமியார் நடத்துவது சரியா? ஊரடங்கை அமலாக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என அனைவரும் உடன் இருக்கிறார்கள். 

நாட்டு மக்களுக்கு ஒரு சட்டம். மொட்டைச் சாமியாருக்கு மட்டும் வேறு சட்டமா?

ராமர் சிலையை உடன் இடம் மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்றால் ராமர் கோயில் கட்டுமானப் பணியை உடனடியாக துவக்கப் போகிறார்களா? ஊரடங்கு காலத்திலும் நடத்த வேண்டிய அத்தியாவசியப் பணியா இது? 

எப்போது வேண்டுமானாலும் செய்யலாமே இதை? இப்போது என்ன அவசரம்?

மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து விட்டு இப்போது அதை ஆளும் கட்சி முதல்வரே மீறுவது ஏன்?


No comments:

Post a Comment