Saturday, March 28, 2020

நல்லா வேலை பாக்கறாரு மந்திரி



"ராமரும் ரூமரும் இல்லாமல் பாஜக இல்லை" என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா சொல்வார்.

அதை நிரூபிப்பது போல இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் சீரியலை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது மத்தியரசு.

(இந்த முடிவு குறித்து காலையில் எழுதிய பதிவை பகிர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு தின மலர் கடுப்பேத்தி விட்டது. ட்ராப்டில் உள்ள அதை நாளை பகிர்ந்து கொள்ளத்தான் போகிறேன் என்று அன்போடு எச்சரிக்கிறேன்)

"நான் ராமாயணம் பார்க்கிறேன். நீங்கள்? " என்ற கேள்வியோடு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்தேகர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

"நீங்கள் ராமாயணம் பார்ப்பதை செல்பி எடுத்து அமைச்சருக்கும் பிரதமருக்கும் அனுப்புங்கள்" என்று கேட்டுக் கொண்டது பிரச்சார் பாரதி. 

நரி செத்தாலும் கண் இரையின் மீதுதான் என்பதை இவர்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.

"ஒரு சோதனைக்காலத்தில் இதெல்லாம் ஒரு அமைச்சருக்கு அழகா?" என்று பிரகாஷ் ஜாவ்தேகர் ராமாயணம் பார்க்கும் பதிவை ட்விட்டர்வாசிகள் கண்டித்து பொங்கி எழ

அந்த பதிவை நீக்கி

"தன் வீடே இப்போது அலுவலகமாகி விட்டது. வீட்டில் அமர்ந்து கொண்டு வேலை பார்க்கிறேன்"

என்று புதிதாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்கிறார்.

அதைப் பார்க்கும் போதே வெறும் போஸ் என்று நன்றாகத் தெரிகிறது.

நடிப்பென்று தெரியாத அளவிற்கு போஸ் கொடுக்க ஜாவ்தேகர் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் அவர்களின் குருநாதர் நடிகர் சிகரம் மோடி இருக்கிறாரே!

No comments:

Post a Comment