Monday, March 2, 2020

மோடியிடம் சொல் சீ சீ சாமியார் . . .


சமூகத்தில் வன்முறையும் பதட்டமும் ஏற்பட்டால் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பது உண்மைதான்.

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையாலும் வளர்ச்சிக்கு பாதிப்பு உருவாகும் என்பதும் உண்மைதான்.

ஆனால் 

சீ.சீ.சாமியார் 

இந்த அறிவுரையை யாரிடம் சொல்ல வேண்டும்?

வன்முறையை தூண்டி விட்ட மோடி வகையறாக்களிடம் சொல்வதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களிடம் போதிக்க வேண்டிய அவசியம் என்ன?

இன்னும் சொல்லப்போனால் 

வளர்ச்சியை உருவாக்க  கையாலாகாத அரசாக இருக்கும் காரணத்தால்தானே குடியுரிமைச்சட்டம் போன்ற தேவையற்ற ஆணிகளால் தன் தோல்விகளை திசை திருப்புகிறது இந்த அரசு!

பிகு: மேலே சொல்லப்பட்ட உபதேசத்தில் இன்னொரு விஷயமும் உள்ளது. அதை தனி பஞ்சாயத்தாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 


No comments:

Post a Comment