Monday, November 26, 2018

ஜெமோ, சாரு பின்னே மோடி



மோடி மட்டும் எல்.ஐ.சி யின் வளர்ச்சி அதிகாரியாக இருந்தால் எல்.ஐ.சி ஏப்ரல் மாதத்திலேயே தன்னுடைய புது வணிக இலக்கை எட்டி விடும். அந்த அளவு சிறந்த விற்பனைப் பிரதிநிதி என்று எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.

மோடி மட்டும் நாவல் எழுதத் தொடங்கினால் ஜெமோ, சாரு நிவேதிதா போன்றவர்கள் எல்லாம் நாவல் எழுதும் பிழைப்பை விட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்பது என் கருத்து.

அப்படி அவர்கள் ஓடிப்போவது இலக்கியத்திற்கு நல்லதுதான் இருந்தாலும் அந்த இடத்திற்கு இன்னொரு மோசமானவர்தான்  வர வேண்டுமா என்ற உங்கள் கேள்வி என் காதில் விழத்தான் செய்கிறது. மோசமானவர்கள் இடத்திற்கு மோசமானவர்கள்தானே வர முடியும்!

மோடியின் கற்பனைத்திறனுக்காகத்தான் நாவல் எழுதலாம் என்று சொன்னேன்.

“பாபர் மசூதி வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளிப் போட்டதற்கு அவர்கள் மீது பதவி பறிப்பு தீர்மானத்தை (Impeachment Motion) கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் அச்சுறுத்தியதுதான் காரணம்”

என்று ஒரு தேர்தல் கூட்டத்தில் வழக்கம் போல அள்ளி விட்டுள்ளார் மோடி.

·         அமித் ஷா வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யோயாவை மர்மமான முறையில் சாகடித்தவர்கள்,
·         அந்த வழக்கை மறு விசாரணை செய்யக் கூடாது என்று தீபக் மிஷ்ராவை தீர்ப்பளித்தவர்கள்,
·         அமித்ஷா விடுதலைக்காக ஆளுனர் பதவியை பேரம் பேசியவர்கள்
·         குதிரை பேரத்தை உத்தர்கண்டில் அனுமதிக்காதவரை நீதிபதியாக்க மறுத்து, கடைசியில் அவர் பணி மூப்பில் மோசடி செய்தவர்கள்

எல்லாம் நீதிபதிகளை மிரட்டுவதாக பேசுவது வெட்கக் கேடானது.

அப்படி காங்கிரஸ் கட்சி நீதிபதிகளை மிரட்டியிருந்தால் காங்கிரஸ் கட்சியின் மீதும் அப்படி மிரட்டியவர்கள் மீதும், வழக்கு போடுங்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவதில் என்ன பிரச்சினை உள்ளது?

காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவர் அப்படி சொன்னாரோ, அவரை தூக்கி ஜெயிலில் போடுங்கள்.

எந்த தலைவர் அப்படி மிரட்டினார் என்று அவருடைய பெயரைக் கூட வெளிப்படையாக சொல்லாமல் கிசுகிசு பாணியில் ஏனய்யா பேசுகிறீர்?

மிஸ்டர் நரேந்திர மோடி. நீதிபதிகளை பாதுகாக்க வேண்டியது பிரதமராகிய உங்கள் கடமை. அதைச் செய்வதற்கான அதிகாரமும் அரசு இயந்திரமும் உங்களிடம்தான் உள்ளது.

அதை விடுத்து ஒரு நாலாந்தரப் பேச்சாளராக தேர்தல் கூட்டத்தில் கிசுகிசு பாணியில் பேசுவது என்பது உங்களின் கற்பனைத் திறனை மட்டுமே காண்பிக்கிறது

இப்படி பொய்யும் புளுகுமாக கட்டுக்கதை பரப்புபவரெல்லாம் பிரதமராக இருப்பது இந்தியாவிற்கு நேர்ந்த இழிவு.

1 comment:

  1. நண்பரே!

    ஒன்றை கவனித்து இருப்பீர். மோடி/அமித்து‍‍-களிடம் வேறு எதுவும் பேச வழி இல்லை. காங்கிரசை மட்டும் வசை பாடி ஓட்டு கேட்டால் போதும் என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை கனித்து இருப்பீர்.

    2019 பொதுத் தேர்தலில் இன்னும் மோசமாகலாம்.

    ஆகட்டும்.

    ReplyDelete