Tuesday, November 27, 2018

மோடியை அழ வைக்காதீர் . . .




மோடி ஒரு கேடியென்பதை மறவாதீர்

இந்த அரசு பதவியேற்கும் போது ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு ராகுல் காந்தியின் வயதாக இருந்து, சோனியாவின் வயதாக அதிகரித்து இப்போது மன்மோகன்சிங்கின் வயதாகி விட்டது என்று இன்றைய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அன்று நக்கல் செய்ததின்

எதிர்வினையாகக் கூட

“ஒரு அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது மோடியின் தாயின் வயது அளவுக்கு உயர்ந்து விட்டது”

என்று இப்போது

ராஜ் பாப்பர் நக்கல் அடித்திருக்கலாம்.

மோதிலால் நேரு தொடங்கி ராகுல் காந்தி வரை உள்ள நேரு குடும்பத்தினரை காவிகள், கண்ணியமற்று தரக்குறைவாக பேசிக் கொண்டே இருப்பதாலும் அதிலே பிரதான வசையாளராக உள்ள நரேந்திர மோடி ராகுல் காந்தியை மக்களவையிலேயே “பப்பு" என்று கிண்டல் செய்ததாலும்

ஏற்பட்ட எரிச்சலின் விளைவாக

“மோடி குடும்பத்திற்கு என்ன பாரம்பரியம் உள்ளது?” என்று காங்கிரஸ் கட்சியின் சி.பி.ஜோஷி கேட்டிருக்கலாம்.

காங்கிரஸ் காரர்கள் பேசியது ரசனைக்குறைவாக இருந்த போதிலும் அதனை துவக்கி வைத்தது என்னமோ மோடியும் காவிகளுமே!

இருப்பினும் காங்கிரஸ் கட்சி அவற்றை எல்லாம் தவிர்த்திருக்க வேண்டும்.

ஏன்?

என்னுடைய நேற்றைய பதிவில் சொன்னதையே நினைவு படுத்துகிறேன்.

மோடி ஒரு சிறந்த விற்பனைப் பிரதிநிதி.

வாயையே மூலதனமாக்கி பிரதமரான ஒரு மோசடிப் பேர்வழி. நான்காண்டுகளில் மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யாத காரணத்தால் அவர்களின் கடுமையான அதிருப்தியை சேகரித்து வைத்துள்ளதால்

மீண்டும் வாக்கு வேட்டை நடத்த

ராமர் கோயில் எனும் வழக்கமான ஆயுதத்தை

தூசி தட்டி துடைத்து பயன்படுத்தும் வேளையில்

இதுபோன்ற எதிர்வினைகள் வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் மோடிக்கு பீட்ஸா கொடுத்தது போலாகி விடும்.

எதுவுமே இல்லாத போதே

பத்து லட்ச ரூபாய் கோட் அணிந்து கொண்டு “ஏழைத்தாயின் மகன்”

வெண்முரசுக்கு போட்டியாக பல பக்க வசனம் பேசுகிற போது இப்போது கேட்கவா வேண்டும்.

எம்.ஜி.ஆர் தூணைப் பிடித்துக் கொண்டு அழுவதைப் போல  மோடி மைக்கைப் பிடித்துக் கொண்டு அழுகாச்சி சீனை ஆரம்பித்து விட்டார்.

பெரு முதலாளிகளின் தரகர் செய்யும் அராஜகங்களை அம்பலப்படுத்துங்கள். ஆட்சியின் அவலங்களை தோலுரியுங்கள். ஆனால் அனுதாபம் தேட மட்டும் வாய்ப்பளிக்காதீர் . . .

பிகு

சி.பி.ஜோஷி பேசியதை ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.  நல்ல விஷயம் இது.

காவிகள் அநாகரீகமாக பேசுவதை மோடி எப்போதாவது கண்டித்துள்ளாரா? இல்லை. அநாகரீகமான பேசுவது என்பதே அவரிடத்திலிருந்துதான் துவங்குகிறது. அவர் காட்டிய அசிங்கமான பாதையில்தானே அத்தனை காவிகளும் பயணிக்கிறார்கள்!


2 comments:

  1. மோடி ஒரு கேடியென்பதை மறவாதீர்******* usual drivel from an urban naxalite and communist thug.

    ReplyDelete
    Replies
    1. கேடிக் கூட்டத் தலைவனைச் சொன்னால் அடியாளுக்கு கோபம் வரத்தான் செய்யும்

      Delete