Friday, November 25, 2022

அதற்கு எங்கே ஆதாரம் மேடம்?

 


கங்கையில் மூழ்கிய முத்துசாமி தீட்சிதருக்கு சரஸ்வதி தேவி அளித்த வீணை அருங்காட்சியகத்தில் உள்ளது என்று இளையராஜா சொன்னார்.

 சொப்பனசுந்தரி வைத்திருந்த கார் இப்போது யாரிடம் உள்ளது என்பது போல தீவிரமான ஆராய்ச்சி நடத்திய தினமலர் முத்துசாமி தீட்சிதரின் வீணை அவரது ஏழாம் தலைமுறை வாரிசான முத்துசாமி ஆடிட்டரிடம் கோவையில் உள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

 இந்த ஆராய்ச்சிக்காக தினமலருக்கு நன்றி சொல்லி அதனை புளகாங்கிதத்தோடு பகிர்ந்து கொண்டுள்ளார் நிர்மலா அம்மையார்.

 


தீட்சிதரின் வீணை எங்கே இருக்கிறது என்பதற்கான ஆதாரம் முக்கியமில்லை மேடம், அந்த வீணையை முத்துசாமி தீட்சிதர் கங்கையில் முழுகிய போது சரஸ்வதி தேவிதான் கொடுத்தார் என்பதற்கான ஆதாரத்தை முதலில் கொடுங்கள்.

 

புராணப் பொய்களை புனிதமாக்காதீர்.

No comments:

Post a Comment