Monday, November 28, 2022

அவ்ளோ வொர்த் இல்லையே மோடி!

 


காலையில் ஆங்கில இந்துவில் படித்த செய்தி . . .

மர்மமான ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போன முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு பஞ்சலோகத்தில் சிலை செய்து அதை ராணுவ தலைமையகத்தில் வைக்கப் போகிறார்களாம்.



தங்கம், வெள்ளி, செப்பு, ஈயம் மற்றும் இரும்பின் கலவையே பஞ்சலோகம். கோயில் உற்சவர் சிலைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கலவை இது. அதன் மதிப்பு அதிகம் என்பதால்தான் சிலைக்கடத்தல் செய்பவர்கள் பஞ்சலோக சிலைகளையே குறி வைப்பார்கள்.

அவ்வளவு மதிப்பில் பஞ்சலோக சிலை வைக்கும் அளவிற்கு பிபின் ராவத் என்ன சாதித்து விட்டார்?

அகால மரணம் அவரை புனிதராக்கி விடுமா என்ன?

இந்திய் ராணுவத்தை காவிமயமாக்கியதும் உளவுத்துறை தகவல்களை அலட்சியம் செய்து ராணுவ வீரர்களை பலி கொடுத்ததும் போர் வந்தால் நடத்த ஆயுதங்களும் வெடி பொருட்களும் இல்லாத அளவிற்கு ராணுவத்தை பலவீனப்படுத்தியதும் காஷ்மீரில் பொய்யான தாக்குதல்களை  ஊக்குவித்ததும்தான் அவர் சாதனைகள்.

அவருக்கு சிலை என்பதே ஓவர். பஞ்சலோக சிலை என்பது ரொம்பவே ஓவர். 


No comments:

Post a Comment