Wednesday, November 16, 2022

உங்களை நம்பித்தானே டாக்டர்?

 


இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் துயரமும் கோபமும் தருகிறது.

ஜவ்வு கிழிந்ததற்கு தரப்பட்ட சிகிச்சை மரணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தைத் தவிர வேறெதுவும் காரணமில்லை என்பதுதான் மிகவும் கோபம் அளிக்கிறது.

அந்தப் பெண் தன் உடல் நலன், எதிர்காலம், உயிர் எல்லாவற்றையும் உங்களிடம் முழுமையாக நம்பி அளித்ததே,, அந்த நம்பிக்கைக்கேற்றார் போல பொறுப்போடு நடந்து கொண்டிருக்க வேண்டாமா? இந்திய கால்பந்து அணியில் இணைய வேண்டுமென்ற கனவை சுவாசித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தன் காலை அகற்றிய போதே இறந்து போயிருப்பாள்!

அந்தப் பெண்ணின் நம்பிக்கை மட்டுமா தகர்ந்தது?

கொரோனா காலத்திற்குப் பின்புதான் மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை வரத் தொடங்கியது. அந்த நம்பிக்கையையும் சிதைக்குமே உங்கள் அலட்சியம்!

2 comments:

  1. உதவாக்கரை தமிழக அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. உதவாக்கரை தமிழக அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    ReplyDelete