Monday, November 14, 2022

நேரு எனும் சிற்பி




 *நாளொரு கேள்வி: 14.11.2022*


தொடர் எண்: *898*

*பொதுத் துறைகளின் சிற்பி நேரு பிறந்த நாள்*

இன்று நம்மோடு இன்சூரன்ஸ் ஒர்க்கர் ஆசிரியர் *அமானுல்லா கான்* (தமிழில் கோவை *சுதா*)
#########################

*தன்னாட்சி செயல்பாடா? - அரசாங்க கட்டுப்பாடா?*

கேள்வி: பொதுத் துறை நிறுவனங்களை கட்டுப்பாடு என்ற பெயரில் கழுத்தை நெரிக்கும் மத்திய அரசின் அணுகுமுறை, இன்சூரன்ஸ் துறை மீதான தாக்கம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

*அமானுல்லாகான்*

மத்திய அரசு எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தன்னாட்சிபெற்ற பொதுத்துறை நிறுவனங்களாக கருதாமல், அரசின் துறைகளைப் போன்றே கருதுகிறது என்பதை சமீப காலத்திய வளர்ச்சிப்போக்குகள் தெளிவாக காட்டுகின்றன.

தங்கள்வணிகங்களை நடத்த இந்நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவை என்பதுஏட்டளவிலேயே உள்ளது. இந்த நிறுவனங்களின் நிர்வாகங்கள் (Board) அரசின் அதிகாரமுடிவுகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அமைப்புகளாக மட்டுமே செயல்படும் நிலைக்கு தாழ்ந்துள்ளன.  இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகமட்டங்களின் முடிவெடுக்கும் செயல்திறனைக் கட்டுப்படுத்தும் இத்தகைய *அதிகாரமட்டத் தலையீடு அந்நிறுவனங்களுக்கு பெரும் தடையாக* உள்ளது. 

எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிகாரத்துவ தலையீடு காணப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே எல்.ஐ.சி மற்றும் அரசு பொது இன்சூரன்ஸ்  நிறுவனங்களும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசால் தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தலையீடும், கட்டுப்பாடும் தற்போது இருப்பது போல் அப்பட்டமாக கடந்த காலத்தில் இருந்ததில்லை. இத்தகைய தேவையற்ற தலையீடுகள் வணிகத்தேவைகளுக்காகவும், கடுமையான போட்டிச் சூழலை எதிர்கொள்ளவும் இயக்குனரவை திறம்பட முடிவெடுப்பதில் சிக்கலை உருவாக்கும் எனவும், தொழில்துறை உறவகளை மோசமாக பாதிக்குமெனவும் கூறக் தேவையில்லை.

பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் ஊதிய உயர்வு, நிலுவைக் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. *முதல் முறையாக PSGI நிறுவனங்களின் ஆட்சிக் குழுவான GIPSA ஐ ஓரங்கட்டி, நிதிஅமைச்சக அதிகாரிகள், ஊழியர் சங்கங்களோடு நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை இந்தத் துறை கண்ணுற்றது.* ஏப்ரல் 2019ல் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போதே GIPSA ஊதிய உயர்வுக்கான கோரிக்கையை விரைவில் தீர்க்க ஆர்வமுடன் இருந்தது. நீண்டகால நடைமுறையினைப் போன்று எல்.ஐ.சிக்கு இணையான ஊதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் திறன் கொண்டவைகளாக அந்நிறுவனங்கள் உள்ளதென GIPSA தொழிற்சங்கங்களுக்கு உறுதியளித்தது. துரதிர்ஷ்டவசமாக இந்த நேர்மறையான உத்திரவாதத்திற்குப் பிறகு, ஜிப்சாவிடம் கனத்த மெளனம் நிலவியது. ஓவ்வொரு முறை பிரச்சனை எழுப்பப்படும் பொழுதும் கோரிக்கைகளை நிதிஅமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்ற பதிலைக் தந்தது...தீவிரமான பிரச்சாரங்களும், தொடர்ந்த போராட்டங்களும் GIPSA வை பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டிய நிர்பந்தத்தினை ஏற்படுத்தியது. மேலும் இத்தகைய இரண்டு சந்தர்ப்பங்களில், நிதி அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது முன்னெப்போதும் இல்லாதது.

இந்த விவாதங்களில் 1.8.2022 முதல் தரப்பட வேண்டிய ஊதிய உயர்வின் முற்றிலும் புதிய வடிவத்தினை தொழிற்சங்கங்களை ஏற்கச் செய்வதில் நிதி அமைச்சக பிரதிநிதி மிகுந்த ஆர்வம் காட்டினார். தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் எதிர்கால ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற திருத்தத்தினை உள்ளடக்கி ஊதிய ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுளள்து.. செயல்திறனை தீர்மானிக்கும் அளவுகோல்கள் குறித்து எந்த அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை. சமூக பொறுப்புக்கள் மற்றும் அரசின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு என்ன மதிப்பீடு வழங்கப்படும் என்பதை குறித்து அரசு எதுவும் கூறவில்லை. 

*பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா* போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் கணிசமான இழப்பை சந்தித்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அத்தகைய பாலிசிகளுக்கான பிரிமிய விகிதங்களை நிர்ணயிக்க PSGI  நிறுவனங்களுக்கு சுதந்திரம் இல்லை, மேலும் இந்நிறுவனங்கள் இதனால் அடைந்த இழப்புகளுக்கான இழப்பீட்டையும் அரசு வழங்குவதில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் ஊதியம் மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நிர்வாகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை  
அனுமதிப்பது தான் சிறந்தது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சனைகளில் அரசின் தலையீடு தொழிலக உறவுகளை சீர்குலைப்பது மட்டுமன்றி தொழிலக ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையுமாகும்..

எல்.ஐ.சி நிர்வாகக்குழு *குடும்ப ஓய்வூதியத்தை ஒரே சீராக 30% ஆக உயர்த்துவதற்கான தனது பரிந்துரைகளை 2019ம் ஆண்டில் அரசிற்கு அனுப்பியது. இப்பிரச்சனை இன்று வரை நிதிஅமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது.* எல்.ஐ.சி திறமையான, செயல்பாட்டு சுதந்திரமிக்க நிர்வாகக்குழுவால் நிர்வகிக்கப்படுகிறது என்னும் கூற்றை கேலிக்குரியதாக்கவில்லையா? அல்லது நிதி அமைச்சக அதிகாரிகள் எல்.ஐ.சி நிர்வாகக்குழு தனது முடிவுகளின் விளைவுகளை புரிந்து கொள்ளும் தகுதியற்றது என எண்ணுவதின் வெளிப்பாடா? எல்.ஐ.சியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதில் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் மெத்தனத்தினால் ஓய்வூதியதாரர்கள் பெரியதுன்பத்தை சந்தித்து வருகின்றனர். இந்த இடைப்பட்டகாலத்தில் கணிசமான ஓய்வூதியதியர்கள் இறந்துள்ளனர். அவர்களின் துன்பங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்பது உண்மையே. ஆனால் எல்.ஐ.சி நிர்வாகம் தனது பொறுப்பிலிருந்து தப்ப முடியுமா? பரிந்துரை செய்த பிறகு அரசின் ஒப்புதலை பெறுவதும், அதனை செயல்படுத்துவதை உறுதி செய்வதும் எல்.ஐ.சியின் பொறுப்பல்லவா? நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனத்தின் நிர்வாகக்குழு தனது நிலைபாட்டில் நின்று அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதை உறுதி செய்து, அதன் பலன்கள் உத்தேசிக்கப்பட்ட தேதிகளிலிருந்து ஊழியர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றதா? இச்சூழல் தொழிலுறவுகள் உட்பட நிறுவனத்தை நிர்வகிக்க எவ்வளவு தன்னாட்சி அதிகாரத்தை எல்.ஐ.சி தன்னகத்தே கொண்டுள்ளது என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

பாலிசிதாரர்களின் நலனைப் பாதுகாப்பதனை முதன்மையாகவும், நாட்டின் வளர்ச்சிக்கும் அதன்மூலம் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் சேமிப்புகளை திரட்டுவதை அடுத்தபடியாகவும் கொண்டு எல்.ஐ.சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் பலமுறை, பாலிசிதாரர்களுக்கு நலன்களுக்கு எதிராக கடினமான பொருளாதார சூழலில் அரசை மீட்டெடுக்க  எல்.ஐ.சியை எதிர்பார்க்கும் பொழுது இந்த உத்திரவாதம் நீர்த்து போகிறது. *ஐடிபிஐ* அதற்கு சரியான உதாரணமாகும். ஐடிபிஐ பாரம்பரியமாக நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வந்தது, ஆனால் துரதிர்ஷடவசமாக அரசின் குறுகிய நோக்கத்தினால் வளர்ச்சி வங்கி வணிக வங்கியாக மாற்ற பட்டது. அதன் காரணமாக இயல்பாகவே குறுகிய காலக்கடனை வாங்கவும், நீண்டகாலத்திற்கு முதலீடு செய்யவும் நிர்பந்தித்ததன் காரணமாக வங்கி நொடிந்து போனது. வங்கியை மீட்டெடுக்க அரசு எல்.ஐ.சியை நாடியது. *பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி எல்.ஐ.சி வங்கியின் பெரும்பகுதி பங்குகளை வாங்கி கடுமையாக முயன்று வங்கியை ஆரோக்கியமானதாக மாற்றியது. இந் நடவடிக்கையின் காரணமாக ஐடிபிஐ எல்.ஐ.சியின் மிகப்பெரிய வங்கி காப்பீட்டுக் கூட்டாளியாக மாறியது. நிலைமைகள் மாறி வரும் தருணத்தில் அரசு ஐடிபிஐ வங்கியை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பதற்கு முடிவெடுத்து, தனது பங்குகளை விற்பதோடு எல்.ஐ.சி வைத்துள்ள பெரும்பகுதி பங்குகளையும் விற்குமாறு பணித்தது.* தற்போது ஐடிபிஐயில் 49.24% பங்குகளை வவைத்கிருக்கும் எல்.ஐ.சி 20.24% பங்குகளை விற்கும்படி கேட்டுக்கொள்ளப் படுவதால் நிர்வாகக் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்.  எல்.ஐ.சி நீண்ட கால ஆதாயங்களுக்காக ஐடி.பிஜயில் முதலீடு செய்திருந்தால், பங்குகளை விற்க ஏன் தற்போது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? 

ஒவ்வொரு பெரிய தனியார் நிறுவனமும் ஒரு வங்கியால் ஆதரிக்கப்படும் நிலையில் போட்டிச் சூழல் சவாலை எதிர்கொள்ளும் எல்.ஐ.சிக்கு நிர்வாகக் கட்டுப்பாடு இல்லையென்றால் பின்னடைவாகிவிடாதா? உத்தேசித்துள்ள ஒப்பந்தத்திலிருந்து எல்.ஐ.சி லாபம் பெறுமா அல்லது பாலிசிதாரர்களின் நிதிகளுக்கு இழப்பை ஏற்படுத்துமா? பாலிசிதாரரின் நலன்களைப் பாதுகாப்பதே அதன் அடிப்படைப் பொறுப்பு என்பதை எல்.ஐ.சி நினைவில் கொள்ளவேண்டும், எந்த ஒப்பந்தமும் இந்தக் கொள்கையை சமரசம் செய்வதாக இருக்கக்கூடாது. 
எல்.ஐ.சி பங்கு விற்பனை என்னவாயிற்று? அது அரசின் நிதிப்பற்றாக்குறை இலக்குகளை சரி செய்வதற்காக மிகவும் புகழ் பெற்ற பொதுத்துறை நிதி நிறுவனத்தை விற்றதாகும்... வணிகத்தில்  ஈடுபடுவது அரசின் பணி அல்ல என்ற கருத்தியல் மட்டுமல்லாமல் நிதிப்பற்றாக்குறையினால் அரசு தவிக்கிறது. எனவே எல்.ஐ.சி நிர்வாகத்தை அவசரகதியில் பங்கு விற்பனைக்கு ஓப்புதல் அளிக்குமாறு வற்புறுத்திய்து. பொருளாதார தேக்கநிலை, போர் ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் எந்த முதலீடும் செய்யாமல் எச்சரிக்கையாக உள்ளனர் என்பதை அறிந்திருந்தும், அரசு எல்.ஐ.சியின் 3.5% பங்குகளை விற்க முன்வந்தது. எல்.ஐ.சியின் பிராண்ட் மதிப்பும், மக்களிடையே அது ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையும் பங்கு விற்பனையின் வெற்றியை உறுதி செய்தன. ஆனால் பட்டியலிடுவதன் காரணமாக அதீத லாபத்தை எதிர்பார்த்த முதலீட்டாளர்கள், பட்டியலிடப்பட்ட விலை, பங்குகளின் விலையில் சரிவு ஆகியவற்றால் ஏமாற்றமடைந்தனர். இது மிகுந்த அதிருப்தியையும் புதுவணிகத்தில் நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தியது. *நிறுவனத்திற்கு நிதித்தேவை இல்லாத நிலையிலும், நிதி வரவிற்கான தேவை ஏற்படாத நிலையில் எல்.ஐ.சி நிச்சயமாக பங்கு விற்பனை முடிவை எடுத்திருக்கக் கூடாது.* இது அரசு சிக்கலான பொருளாதார சூழலில் தனது நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட எடுக்கப்பட்ட முடிவு என்பதற்கு சரியான உதாரணமாகும்...

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன்களுக்கு ஏற்ப ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கு மிகவம் அவசியமான செயல்பாட்டு தன்னாட்சியை அரசின் அதிகாரத்துவம் எவ்வாறு தர மிறக்கியுள்ளது என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகள் ஆகும். அதீதமான அதிகாரத்துவ தலையீடு பாலிசிதாரர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வணிக முடிவுகளையே தோற்றுவிக்கும். எத்தகைய, சமூக நோக்கங்களுக்காக “தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தங்களது செயல்பாடுகளை நிர்வகிக்க எல்ஐசி மற்றும் பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள்  தேவையான தன்னாட்சி அதிகாரத்தைக் கோரிப் பெற வேண்டிய தருணம் இது.

*செவ்வானம்*

No comments:

Post a Comment