Friday, November 18, 2022

ஜெயமோகன், நீயெல்லாம் ஒரு . . .

 


ஜெயமோகனைப் பற்றி இன்னும் கொஞ்ச நாள் எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த மனிதனோ வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக "அறை கலன் வார்த்தையை நான் உருவாக்கினேன் என்று சொல்லவேயில்லை" என்று பல்டி அடித்து அந்தாளை விமர்சித்தவர்களை அதிலும் குறிப்பாக எழுத்தாளர் பெருமாள் முருகனை அசிங்கமாக திட்ட, அணைய வேண்டிய தீ மீண்டும் பற்றிக் கொண்டு விட்டது.

ஜெமோவின் தளத்திலிருந்து எடுத்ததன் ஸ்க்ரீன் ஷாட் கீழே உள்ளது. பொன்னியின் செல்வன் நாவலையும் கல்கியையும் திட்டி எழுதிய பதிவுகளை வஜனம் எழுதும் வாய்ப்பு வந்தவுடன் கமுக்கமாக அழித்தது போல இந்த பதிவையும் அழிக்கக்கூடாது என்பதற்காகத்தான் ஸ்க்ரீன் ஷாட்.

இப்போது அதனை படியுங்கள்.






நிஜமாகவே இப்பதிவில் உள்ளது போலத்தான் பேசினாரா?

இந்த காணொளியை பாருங்கள்.




ஜெயமோகனே தன் தளத்தில் பகிர்ந்து கொண்ட யூட்யூப் இணைப்பை பார்த்தும் உறுதி செய்கிறேன்.

"நான்தான் உருவாக்கினேன்" என்று பேசியதை கேட்டீர்கள் அல்லவா!

பொய் அம்பலமானதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஏற்பு பிழை என்றெல்லாம் எழுதி சமாளித்து  விட்டு இப்போது உண்மைக்கு மாறாக பேசுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.  அப்படி அயோக்கியத்தனம் செய்ய உசுப்பேத்தி விட இவரது ஞான மரபு குண்டர் படை வேறு.

உண்மையை அம்பலப்படுத்திய எழுத்தாளர் பெருமாள் முருகனை வசை பாடி எழுதியுள்ளதெல்லாம் புளிச்சமாவின் சின்ன புத்திக்கு சான்று.

நீயெல்லாம் ஒரு மனுசனா என்று கேட்கக்கூடிய அளவிற்கு பொய்யன் ஜெயமோகன்!

இல்லை, 

மனிதன் என்றே கருத அருகதையற்ற ஒரு ஜந்து இந்தாள். இந்தாளும் இவர் குண்டர் படையும் வெறுத்து ஒதுக்கத்தக்க விஷப்பாம்புகள்.




No comments:

Post a Comment