Thursday, June 9, 2022

கருமுட்டை வணிகம் -கைது செய்யுங்கள்

 


 

தன் தாயும் தன் தாயுடன் வாழ்பவரும் தன்னை பல முறை பல   மருத்துவமனைகளில் போலி ஆதார் அட்டைகளைக் கொண்டு கரு முட்டை கொடுக்க வைத்துள்ளனர் என்ற இளம் பெண்ணின் குற்றச்சாட்டு தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று.

 உடல் உறுப்புத் திருட்டுக்கு இணையான குற்றம் என்று சொன்னால் கூட தவறில்லை. அது மனிதன் இறந்து போனதற்கு பின்பு நடப்பது. இது மனிதன் பிறப்பிற்காக செய்யப்படுவது.

 அந்த பெண்ணின் குற்றச்சாட்டு ஆழ்கடலில் ஒளிந்துள்ள பெரும் பனிப்பாறையின் விளிம்பாகவே தோன்றுகிறது. எத்தனை பெண்கள் இது போல பாதிக்கப்பட்டனரோ என்று பதைக்க வைக்கிறது.

 ஆம்.

 இன்று மருத்துவத் தொழிலில் அதிலும் தனியார் மருத்துவ மனைகளில் கொடி கட்டி பறப்பது செயற்கை கருத்தரிப்பு நிலையங்கள்தான். புற்றீசல் போல பல செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்தான். பல மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் கிளை திறந்து கொண்டிருக்கிறார்கள்.

 எப்படியாவது குழந்தை வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறவர்கள், இவர்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று பணத்தை கொட்டித் தர தயாராக இருக்கிறார்கள்.

 அந்த பலவீனத்தை இம்மையங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அதற்காக எப்படிப்பட்ட முறைகளையும் கையாள்வார்கள்.

 அதனால் தமிழ்நாட்டு அரசு இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து தவறிழைத்த  மருத்துவமனைகள் மூடப் பட வேண்டும்.

 

No comments:

Post a Comment