Monday, June 20, 2022

அதெல்லாம் முடியாதுடா தம்பி . . .

 


அக்னிபாத் எனும் அயோக்கியத்திட்டத்தை சரியாக புரிந்து கொண்ட இளைஞர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய ஒவ்வொரு ஒன்றிய மந்தியும் சாரி மந்திரியும் தங்கள் துறையில் வேலை வாய்ப்பில்  10 %  ஒதுக்கீடு அக்னி வீரர்களுக்கு தருவோம் என்று அறிவித்து வருகின்றனர். 

இது போன்ற இட ஒதுக்கீடெல்லாம் கொல்லைப்புற வழியில் வருவதாகும். இதையெல்லாம் அனுமதிக்க முடியாது என்று இரண்டு மாதம் முன்புதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக இந்த 10 % இட ஒதுக்கீடு என்பதே பெரிய டுபாக்கூர் வேலைதான். மோடியின் மந்திரிகள் மட்டும் மோடியைப் போலவே ஃப்ராடுகள்தானே என்ற உங்கள் மனதின் குரல் கேட்டு விட்டது.

மற்ற மந்திரிங்க அறிவிப்பை கேட்டதும் விமானத்துறை மந்திரியான ஓடுகாலித் தம்பி ஜோதிர் ஆதித்தியா சிந்தியாவும் உணர்ச்சிவசப்பட்டு விமானத்துறையிலும் 10 % இட ஒதுக்கீட்டுன்னு சொல்லிட்டான்.

தம்பி சிந்தியா, ஏர் இந்தியாவை டாடா கிட்ட வித்துட்ட, ஏர்போர்ட்டை எல்லாம் அதானிகிட்ட கொடுத்திட்ட, இவங்கெல்லாம் அக்னிவீரனுக்கு வேலை கொடுப்பாங்களா? (கிழிப்பாங்க) நீ மந்திரியாக இருக்கறதே தண்டம்தான்.  இதுல விமானத்துறையில் 10 % இட ஒதுக்கீடுன்னு காமெடி செய்யறே!

பிகு: அக்னிபாத் என்பது சமூக நீதிக்கு எதிரான மிகப் பெரிய மனு தர்ம சதி. விரிவாக விரைவில் எழுதுவேன்


No comments:

Post a Comment