Monday, June 13, 2022

உழைப்பாளிகளின் வாழ்வை வார்த்தைகளில் வடித்தவர்

 


தாகம், சங்கம், சுரங்கம் என தான் எழுதிய அனைத்து நாவல்களிலும் உழைப்பாளி மக்களின் வாழ்வை வார்த்தைகளில் வடித்த மூத்த முற்போக்கு எழுத்தாளர் தோழர் கு.சின்னப்ப பாரதி அவர்களுக்கு செவ்வணக்கம்.

பீகார் மாநில நிலக்கரிச் சுரங்கத்துக்குள் நாமே சென்று இடிபாட்டில் சிக்கிக் கொண்டு மரணத்தை எதிர் நோக்கி தவிப்பது போன்ற உணர்வை சுரங்கம் தந்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.

மலைவாழ் மக்களின் போராட்டத்தை சொன்னது சங்கம்.

கொண்டாட்டத்தை எழுத பலர் உள்ளார்கள். போராட்டத்தை எழுதுபவர்கள் சிலரே. அவர்களில் முன்னத்தி ஏரான தோழர் கு.சின்னப்ப பாரதி அவர்களின் மறைவு உழைக்கும் மக்களுக்கு பேரிழப்பே

No comments:

Post a Comment