Thursday, June 2, 2022

காஷ்மீர் - மீண்டும் நாசம் மோடியாலே

 


1990 ல் காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்த போது காஷ்மீர் பண்டிட்டுகள், இஸ்லாமியர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டனர். இஸ்லாமியர்களுக்கு வேறு வாய்ப்பில்லாததால் அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியிலேயே நீடித்தார்கள். பண்டிட்டுகள் ஜம்முவிற்கும் வேறு மாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்தார்கள்.

அதற்குப் பிறகும் சில ஆயிரம் பண்டிட்டுகள் குடும்பங்களோடு காஷ்மீர் பகுதியிலேயே வசித்தார்கள். இத்தனை ஆண்டுகளில் அவர்களின் மனதில் அச்ச உணர்வு உருவாகவே இல்லை. 

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக பண்டிட்டுகள் ஆறு பேர் தீவிரவாத தாக்குதலில் இறந்து போயுள்ளனர். ஓரிருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.

திடிரென்று ஏன் பண்டிட்டுகள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர்?

பிரதமர் என்ற பெயரில் ஒரு பொறுப்பற்ற ஜந்துவை இந்தியா கொண்டுள்ள துரதிர்ஷடம்தான்.

ஜியோவுக்கும் பேடிஎம் மிற்கும் செய்த விளம்பர தூதர் வேலையை ஊதி பெருக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட ஒரு திரைப்படத்திற்கும் செய்ததால், அதே சங்கை எல்லா சங்கி மூடர்களும் நாராசமாக ஊத 

இன்று பண்டிட்டுகள் மீண்டும் தாக்கப்படுகின்றனர்.

மோடி எனும்  மூடன் வாய் மூடி இருந்தாலே பிரச்சினைகள் குறையும்.

1 comment:

  1. பண்டிட் ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த திட்டங்களையே அழிக்கிறார்கள், அவர் சொந்த ஊரையா விட்டுவைப்பார்கள்.

    ReplyDelete