Monday, June 27, 2022

அதானிக்கு திருடன் மேல்….

 


ஏதோ ஒரு கூட்டத்தில் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் சொன்ன கதை . . .

ஒரு டவுன் பஸ்ஸில் ஏராளமான பயணிகள் நெருக்கிக் கொண்டும் அவஸ்தைப் பட்டுக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.

 நடத்துனர்    பயணச்சீட்டுக்களை கொடுத்து வருகிறார். ஒரு பயணி, அலறுகிறார். அவருடைய பேண்ட் பாக்கெட் கீறப்பட்டு பர்ஸ் திருடப்பட்டு இருந்தது. அவர் அலறுகிறார். நடத்துனரோ டிக்கெட் எடுக்கச் சொல்கிறார். இவர் சுற்றி முற்றி பார்க்கிறார். தெரிந்தவர் யாருமில்லை. நடத்துனரிடமே நிலைமையைச் சொல்லி இன்று ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள், நாளை கொடுத்து விடுகிறேன் என்று வெட்கத்தை விட்டு கெஞ்சுகிறார். அவரோ கறாராக டிக்கெட் வாங்க முடியலைன்னா அடுத்த ஸ்டாப்பில இறங்கிடு என்று கட்டளையிடுகிறார்.

 

இவர் கிட்டத்தட்ட அழும் நிலைமைக்கு வந்து விட்டார். பர்ஸில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பறி போனதை விட டிக்கெட்  வாங்க பத்து ரூபாய்க்கு வழியில்லாமல் போய் விட்டதே என்பதுதான் அவரை மிகவும் பாதித்தது. அடுத்த ஸ்டாப்பில் இறங்கும் முன்பாக ஒரு உரத்த குரல் அவரை தடுத்து அவருக்காக டிக்கெட் கேட்டது. அந்த மனிதரை இவர் நன்றியோடு பார்க்கிறார். நா தழுதழுத்தது.   

 இவர் இறங்க வேண்டிய ஸ்டாப்பில்தான் அந்த மனிதரும் இறங்குகிறார். அவரது கைகளைப் பற்றி நன்றி தெரிவிக்கிறார். டிக்கெட்  காசை திருப்பித் தர விலாசம் கேட்கிறார், “மனுசனுக்கு மனுசன் இது கூட செய்யலைனா  நான் என்னய்யா மனுசன்!” என்று சொல்ல இவர் வீட்டுக்குப் போகிறார்.

 அந்த மனிதன் மனதுக்குள் சொன்னான்.

 “மொத்த பர்ஸையும் அடிச்சாச்சு. பத்து ரூபாய்    கொடுத்தது பெரிய விஷயமா?“

 விமான நிலையம், துறைமுகம், சுரங்கங்கள், நுகர்வோர் பொருட்கள், மின்சார உற்பத்தி, இதரவை, இதரவை என்று  இந்தியாவில் உள்ள எல்லாவற்றையும் மட்டுமல்ல ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை  என்று   சேவகன் மோடியின்  உதவியோடு   விரிவுபடுத்திக் கொண்டு அதற்கு வங்கிகளிலிருந்து கடன் வாங்கி, அந்த கடனையும் திருப்பிக் கட்டாமல் தள்ளுபடி செய்ய வைத்து குவிக்கும் காசிலிருந்து ஏதோ கொஞ்சம் தொகையை தர்ம காரியத்துக்கு கொடுப்பதாக அறிவித்தால் (நோட் த பாயிண்ட். அறிவிப்பு, கொடுப்பது அல்ல) அதானிக்கு என்ன நஷ்டம்?

 அதையும் ஆஹா, ஒஹோ என்று புகழ்ந்து எழுத ஐ.டி செல் இருக்கிறது. அதையும் பரப்ப முட்டாள் சங்கிகள் இருக்கவே இருக்கிறார்கள்.

 அறிவித்த அதானியை விட 10 ரூபாய் கொடுத்த பிக்பாக்கெட் திருடன் மேல்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

No comments:

Post a Comment