Wednesday, May 3, 2023

அனுமனை அசிங்கப்படுத்துவது நரேந்திரனே

 


கர்னாடகத் தேர்தலில் வெற்றி பெற வழக்கம் போல விஷத்தை கக்க தொடங்கி விட்டார் "வெறும் நரேந்திரா". 

ராமனை சிறையில் வைத்தவர்கள் (இது பற்றி தனியாக எழுதுகிறேன்) அனுமனை துதிப்பவர்களை தடை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள் என்று காங்கிரஸ் கட்சியை தாக்கியுள்ளார்.

என்னது அனுமனை துதிப்பவர்களை தடை செய்யலாமா என்று யாரும் கொதிக்க வேண்டாம்.

நரேந்திரனின் வழக்கமான அயோக்கியத்தனம்தான் இது.

பஜ்ரங் தள் அமைப்பையும் பாபுலர் ஃப்ரண்ட் அமைப்பையும் தடை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் சொல்லியுள்ளது.

பஜ்ரங் தள் அமைப்பு அடிப்படையில் ஒரு ரௌடி அமைப்பு. அடியாட்கள் வைத்து கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கலவரத்துக்கு ஆள் அனுப்புவது போன்றவற்றை செய்யும் கிரிமினல் கூட்டம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பாஜக என்றால் அடியாட்கள் பிரிவு பஜ்ரங் தள்.

தீரேந்திர ஜா எழுதி தோழர் இ.பா.சிந்தன் தமிழாக்கம் செய்த "நிழல் ராணுவங்கள்" நூல் அறிமுகத்தில் பஜ்ரங் தள் பற்றி நான் எழுதியது கீழே. 

"அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க திரட்டப்பட்ட படையினர், குஜராத் கலவரத்தில் நர வேட்டை நடத்தினார்கள், ஒடிஷாவில் பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸையும் அவரது இரு மகன்களையும் கொன்றவர்கள், இப்போது மாட்டின் பெயரால் கொலைகளை நடத்துபவர்கள், அவர்கள்தான் பஜ்ரங் தள். மங்களூரில் இப்போது பல தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாவலர்களாக செயல்படுகிறார்கள். அப்படி பாதுகாப்பு ஏற்பாட்டை ஏற்று பணம் அளிக்காவிட்டால் தாக்குதல் நடத்துவதும் பஜ்ரங் தள்தான் என்பதுதான் சுவாரஸ்யம்"

இந்த அமைப்பை தடை செய்யாமல் பாராட்டி விருதா கொடுக்க முடியும்!

அனுமன் என்று பெயர் வைத்துக் கொண்டதன் மூலமும் அந்த அமைப்பிற்காக வக்காலத்து வாங்க அனுமனையும் அனுமன் பக்தர்களையும் அசிங்கப்படுத்தியுள்ளது "மத வெறி நரேந்திரா" தான்.

கர்னாடக மக்கள் புரிந்து கொண்டால் நல்லது. 

பிகு : நிழல் ராணுவங்கள் முழு நூல் அறிமுகத்திற்கான இணைப்பு இங்கே

No comments:

Post a Comment