Friday, May 19, 2023

கோட்ஸே கும்பலோடு ஒரு மோதல்

 


வீட்டின் புனரமைப்பு வேலைகளின் இறுதிக் கட்டம். அதனால் விடுப்பில் வீட்டில்தான் இருக்கிறேன். கொஞ்ச நேரம் முன்பாகத்தான் கணிணியை உயிர்ப்பித்து முக நூலுக்கு சென்றேன்.


அங்கே மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சங்கிப் பெண்மணி காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தார்.


தேச விரோத, பயங்கரவாத ஆதரவு, மனிதத்தன்மையற்ற பதிவு என்று கோபமாக பதில் போட்டால்

அந்த அம்மணியோ ரொம்பவுமே கூலாக "எப்படி?" என்று கேட்கிறார்.

வேறு சிலரும் பதிவுக்கு எதிராக எழுதத் தொடங்கினார். 

"கோட்சேவை கொண்டாடும் கும்பல்தான் இக்குழுவில் பெரும்பாலானவர்கள் என்ற என் மதிப்பீட்டை நிஜமாக்கிய பதிவர், அட்மின் மற்றும் மாடரேட்டர்களுக்கு நன்றி. வெட்கம் கெட்ட ஜென்மங்களே!"

என்று சூடாக அடுத்த பின்னூட்டத்தையும் போட்டேன்.

இன்னொரு சங்கி" குழு முடக்கப்படும் அபாயம் உள்ளது" என்று எழுத என்ன ஆனதோ, பதிவை காணவில்லை.

சில நாட்களுக்கு முன்பாக அப்படித்தான் ஒரு லெட்டர்பேட் கட்சிக்காரர் கூட இதே குழுவில் மோதல் நடந்தது. அது பற்றியும் எழுத வேண்டும்.

இந்த குழுவில் நீடிக்க வேண்டுமா என்ற கேள்வி கூட வந்தது. இருப்பதால்தானே இது போன்ற அயோக்கியத்தனப் பிரச்சாரம் நடப்பது தெரிகிறது என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

வெறும் பார்வையாளராக இல்லாமல் அவ்வப்போது சூடாக பதில் கொடுப்பதால் அவர்களே கூடிய சீக்கிரம் தூக்கி விடுவார்கள்.

அதற்காக "ஐ யம் வெய்ட்டிங்"


No comments:

Post a Comment