Wednesday, May 31, 2023

முட்டாப்பசங்க! முட்டாப்பசங்க!!!

 



 

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு பதிவு பார்த்தேன்.

 

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் ஒரு மண் மேட்டை அந்த ஊர் மக்கள் எச்சில் துப்பியும் செருப்பால் அடித்தும் சிறுநீர் கழித்தும் அசிங்கப் படுத்துகின்றனர். அது முகமது கோரியால் கொல்லப்பட்ட இந்து மன்னன் பிரித்விராஜ் சௌஹானின் சடலம் புதைக்கப்பட்ட இடம் என்றும் இன்னும் ஏன் பிரித்வி மீது ஆப்கான் மக்கள் கோபமாக உள்ளார்கள் எம்று சொன்ன அந்த பதிவு அதற்கு ஒரு காரணத்தையும் சொல்கிறது.

 

பிரிதிவியின் மாமனார் ஜெயச்சந்திரன் துணையோடு பிரித்வியை வென்ற முகமது கோரி பிரித்வியின் இரண்டு கண்களை நோண்டி காந்தஹார் கூட்டிச் செல்ல, கண்கள் தெரியாவிட்டாலும்  ஒலியைக் கொண்டு குறி பார்த்து அம்பு விடும் திறமை பிரித்விக்கு உண்டு  என்று அவன் நண்பர்கள் சொல்ல அதை கோரியும் பரிசோதித்து வியந்து சபாஷ் என்று பாராட்ட குரல் வந்த திசையிவ் பிரித்வி அம்பு விட கோவ்ரி காலி

 

இதிலென்ன தவறு என்று நீங்கள் நினைக்கலாம்.

 

இந்த வரலாறே டுபாக்கூர் என்பதற்கு ஒரு காரணம் போதும்.

 

பிரித்விராஜ்  இறந்தது  1192 ம் வருடம்.

 

முகமது கோரி இறந்த வருடம்  1206,

 

1206 ல் செத்துப்போன முகமது கோரியை 1192 ல் இறந்த பிரித்வி  எப்படி   அம்பு விட்டு கொன்றிருக்க முடியும்.

 

படிங்கடா, படிங்கடா முட்டாப்பசங்களா படிங்கடா என்று பவாரியா கும்பலின் மாமன் கொள்ளைக் கூட்டததிடம் சொல்வது போல சங்கிக்கூட்டத்திடமும் சொல்ல வேண்டும்.

 

ஆமாம்.

 

இவர்களும் கொள்ளைக் கூட்டத்தினர்தான்.

 

படிக்காத முட்டாப்பசங்கதான் . . .        

 

No comments:

Post a Comment