Sunday, May 21, 2023

ராஜீவ் காந்தி கொலையான அன்று.

 


அந்த இரவு நானும்  அன்றைய நெய்வேலி கிளைச்சங்கத் தலைவர் தோழர் கே.ராமலிங்கமும்  நெய்வேலி அமராவதி திரையரங்கில்   வீர பாண்டிய கட்டபொம்மன் (அன்று பார்த்தது ஐந்தாவது முறை) இரவுக் காட்சி  பார்த்து விட்டு பஸ்ஸ்டாண்டில் டீ சாப்பிட்டு விட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அதுவரை ராஜீவ் கொலையான செய்தி தெரியவில்லை. காலை ஐந்தரை மணிக்கு பால்காரர் வந்து தகவல் சொல்லும் போது மட்டுமே தெரிந்தது. அவரும் எக்ஸ்ட்ரா ஒரு லிட்டர் பால் கொடுத்து ஃபிரிட்ஜில வச்சுக்குங்க, இனிமே எப்போ வர முடியும்னு தெரியல என்று சொல்லி விட்டு போனார்.


ஒரு அனிச்சை செயலாக நானும்  தோழர் ராமலிங்கமும் மறைந்த தோழர் விஸ்வேஸ்வராவும் பக்கத்தில் இருந்த அலுவலகம் போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டோம். சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை தொடங்கி விட்டார்கள். திமுக, சிபிஎம், சிபிஐ, ஜனதாதள், தொமுச, சி.ஐ.டி.யு, ஹெச்.எம்.எஸ் என அத்தனை கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள். தப்பிய ஒரே கொடி எங்கள் சங்கத்தின் கொடி.

அதைத் தவிர இன்னொரு அமைப்பின், கட்சியின் கொடியை மட்டும் கை வைக்கவில்லை.

அது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள்.

அப்போதே அந்த பயம்!

மீள் பதிவு 

No comments:

Post a Comment