Thursday, May 25, 2023

நாடாளுமன்றக் காவலர்கள்

 


கடந்த ஒன்பது வருடங்களாக நாடாளுமன்றத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது.

பிரதமராக உள்ளவர் நாடாளுமன்றத்தை எச்.ராசாவின் ஹைகோர்ட்டாகவே மதிக்கிறார் என்பதை முந்தைய பதிவு சொல்லும்.

எந்த ஒரு மசோதாவும் விவாதிக்கப்படுவதில்லை.
எந்த ஒரு பிரச்சினையும் எழுப்ப அனுமதிக்கப்படுவதில்லை.
அரசுக்கு எதிரான பேச்சுக்கள் எல்லாம் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்.
எந்த ஒரு மசோதாவும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு செல்லாது.

மொத்தத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது டிமோவின் ஆட்சிக் காலத்தில் உயிரிழந்து விட்டது.

காந்தி கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பயங்கரவாதி கோழை சாவர்க்கரின் பிறந்த நாளன்று திறக்கப்படும் கட்டிடம் என்பது நாடாளுமன்றக் கட்டிடம் அல்ல.

உயிரற்ற ஓர் எலும்புக்கூடு.

அதன் திறப்பு விழாவை புறக்கணிப்பவர்களே நிஜமான நாடாளுமன்றக் காவலர்கள்.  

No comments:

Post a Comment