Tuesday, May 30, 2023

ஓசி ப்ளைட்டுக்கு இம்புட்டு விசுவாசமா

 


டெல்லிக்கு ஓசியில் ஏரோப்ளேனில் கூட்டிப் போனதற்கு மதுரை ஆதீனம் காண்பிக்கும் விசுவாசத்தை பாருங்கள்.


டிமோவுக்கு பிடித்த மாதிரியே நேருவை திட்டறாரு. அதுல "லடாக்கை படாக்குனு" பிடிச்சுட்டாங்கன்னு எதுகை மோனை வேற. அல்லாத்தையும் டிமோதான் மீட்டாரு.

அவரு என்ன செய்வாரு!

செஞ்சோற்றுக்கடனுக்கு எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்டை பேசறாரு! இதில் ஆச்சர்யப்படவும் ஒன்றில்லை. அரசர்களை அண்டிப் பிழைப்பதுதான் சாமியார் மடங்களின் பாரம்பரியம். அதில் எப்போதாவது முரண்பாடு தோன்றினால்தான் ஜெயேந்திர, விஜயேந்திர கைதுப் படலங்கள் நிகழும். 

சீனா என்று சொன்னாலே டிமோவின் கால்கள் எல்லாம் டேன்ஸ் ஆடிடும்னும் டிமோ காலத்தில்தான் சீனா தான் ஆக்கிரமித்த இடத்துல வீடுகள் கட்டி ஊருக்கு பெயரெல்லாம் கூட வச்சிட்டாங்கன்னு பாவம் ஆதீனத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.

மிஸ்டர் ஆதீனம், நித்தி உங்க ஆதீனத்தைத்தான் படக்குன்னு பறிச்சிருந்தார். அது மட்டும் தொடர்ந்திருந்தா, நீர் பாய்ஸ் செந்தில் மாதிரி எந்த கோயில்ல எந்த வேளையில என்ன பிரசாதம் கிடைக்கும்னு அல்லாடிக்கிட்டு இருக்கனும். கிடைக்கிற சோத்தை தின்னுட்டு ஒழுங்கா வேலையைப் பாரும். உமக்கு எதுக்கு இந்த டிமோவுக்கு பல்லக்கு தூக்கற அரசியல்?

1 comment:

  1. மட ஆதி பாடி உள்ளே!
    ஜனாதிபதி வெளியே!!

    வாழ்க ஜனநாயகம்.

    ReplyDelete