Tuesday, May 23, 2023

தலையாட்டி பொம்மைகள் என்று தெரிந்தே

 


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். டிமோ திறந்து வைப்பது சரியல்ல, குடியரசுத் தலைவரை இழிவு படுத்தி விட்டார்கள் என்றெல்லாம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கொதித்துள்ளார்.

ஆனால் இந்த கொதிப்பு ஜனாதிபதிக்கு இருக்கவே இருக்காது. தாங்கள் வெறும் தலையாட்டி பொம்மை என்பதை அறிந்தே அந்த பொறுப்பிற்கு இப்போதுள்ளவரும் முன்பிருந்தவரும் வந்தனர்.

பட்டியலினத்தவரையும் பழங்குடியினத்தவரையும் கௌரவப்படுத்தி உள்ளோம் என்று டிமோ சொன்னதெல்லாம் அவருடைய வழக்கமான ஜூம்லா என்று புரிந்து கொண்டவர்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியே கிடையாது. 

No comments:

Post a Comment