Monday, May 16, 2022

பாராட்டுவோம், வாழ்த்துவோம்

 


பேட்மிண்டன் விளையாட்டின் உலகக் கோப்பையை இந்திய அணி முதல் முறையாக வென்றுள்ளது.

ஆடவருக்கான  போட்டி தாமஸ் கோப்பை என்றும் மகளிருக்கான போட்டி உபேர் கோப்பை என்றும் அழைக்கப் படுகிறது.

பேட்மிண்டன் விளையாட்டின் கில்லாடிகளாக அறியப்படுகிற மலேசியா, டென்மார்க் ஆகிய நாடுகளை முந்தைய சுற்றுக்களில் தோற்கடித்து 14 முறை தாமஸ் கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் இந்தோனேசியாவை 3-0 என்ற அளவில் வெற்றி பெற்று வாகை சூடிய இந்திய அணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கிரிக்கெட்டைத் தாண்டியும் விளையாட்டு உலகம் உள்ளது. அதிலேயும் இந்தியா அழுத்தமான முத்திரை பதிக்க இந்த வெற்றி நிச்சயம் உற்சாகமூட்டும்.

No comments:

Post a Comment