Sunday, May 22, 2022

ரஜினி படத்து லிங்கமிது

 



தொலைக்காட்சி சேனல்களை மாற்றி வருகையில் ஒரு லோக்கல் சேனலில் "அதாண்டா, இதாண்டா, அருணாச்சலம் நாந்தாண்டா" பாடல் ஒடுகையில் அருணாச்சலம் பட இயக்குனர் சுந்தர்.சி ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வந்து விட்டது. 

"அந்த பாடலை படமெடுக்கையில் ஒரு சிவலிங்கம் இருக்க வேண்டும் என்று ரஜினி சொல்லி விட்டார். அந்த நேரத்தில் லிங்கத்துக்கு எங்கே போவது என்று அனைவரும் தவிக்கையில் சாப்பாடு வந்திருந்த அண்டாவை கவிழ்த்து கரி பூசி சிவலிங்கமாக்கி விட்டார் கலை இயக்குனர் ஜி.கே"

அதைக் கேட்ட பின்பு அந்த பாடலை பார்க்கையில் சிவலிங்கம் மறைந்து பிரியாணி அண்டாதான் தெரிகிறது.

இதை எழுதுகையில்தான் கோவையில் சசிகுமார் என்ற சங்கி குடும்பப் பிரச்சினையால் கொல்லப்பட்ட போது சங்கிகள் அந்த சடலத்தை வைத்துக் கொண்டு கலவரம் செய்ததும் "ஆஜ்மீர் பிரியாணி" என்ற கடையில் பிரியாணியை அண்டாவோடு திருடிக் கொண்டு ஓடியதும் நினைவுக்கு வந்தது.

சங்கிகள் ஒரு வேளை அந்த பிரியாணி அண்டாவில் சிவலிங்கத்தைப் பார்த்து பக்தியோடு தூக்கிக் கொண்டு போயிருப்பார்களோ?



No comments:

Post a Comment