Friday, May 13, 2022

நீதான் கழிசடை விஷமூர்த்தி

 


தமிழக சங்கிக்கூட்டத்தின் ஒரிஜினல் தலைவனும் மோசமான ஜந்துவுமான குருமூர்த்தி அரசு வங்கி ஊழியர்களை, அதிகாரிகளை கழிசடை என்று திட்டியுள்ளார். 

பணக்காரர்கள் வரி கட்டாமல் ஏய்ப்பதற்கு வழி சொல்லும் திருட்டுத் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்த விஷமூர்த்தி, அதே திருட்டு புத்தியோடு பல ஆலோசனையை முன்வைக்கிறார்.

சோ.ராமசாமி குடும்பத்தை ஏமாற்றி கைப்பற்றிய துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழா என்ற கொடியவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அவர் கக்கிய விஷத்தின் சில பகுதிகள்.

"இன்றைய அரசு வங்கி ஊழியர்கள், அதிகாரிகளில் திறமையானவர்கள் தனியாருக்கு சென்று விடுகிறார்கள், அதனால் இருப்பதெல்லாம் கழிசடைகள்தான். திறமையானவர்களை கொண்டு வர வேண்டுமானால் இப்போதுள்ள முறைகள் (அதாவது இரு கட்ட தேர்வு, நேர்முகத் தேர்வு, இட ஒதுக்கீடு) பிரச்சினையாக உள்ளது. அரசு வங்கிகளை தனியாருக்கு கொடுத்து விட்டால் சிக்கல் இருக்காது.

50 % பங்குகளை விற்று விட்டால் சி.பி.ஐ, சி.வி.சி பிரச்சினையெல்லாம் கிடையாது. ஆகவே அதனை அரசு செய்ய வேண்டும்.

முன்பெல்லாம் டெல்லியிலிருந்து போன் வரும், கடன் கொடுப்பார்கள், அது வராக்கடன் ஆகி விடும். இப்போதுதான் அது நின்று போயுள்ளது. தனியார் வங்கிகள் ஆனால் அந்த பிரச்சினை கிடையாது"

கடைசி இரண்டு விஷயங்களைப் பற்றி சற்று விரிவாக எழுதுகிறேன்.

அரசு வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை இழிவுபடுத்தி பேசிய போதே வங்கித்துறைக்கான மந்திரி அந்த பேச்சை நிறுத்தி விஷமூர்த்தியை அறைந்திருக்க வேண்டும்.

அவர் இளித்துக் கொண்டே இருந்ததால்

முகப்புப் படம் அதனை நிறைவேற்றியுள்ளது.


1 comment:

  1. அயோக்கியத்தனம்...அவனுக்கு ஆணவம் அதிகம்...அடக்குவோம்

    ReplyDelete