Wednesday, May 5, 2021

தாய்ப்பாலும் விஷமும்

 


ஊடகவியாளர் தோழர் கவின்மலர் அவர்களின் முக நூல் பதிவை கீழே பகிர்ந்து கொள்கிறேன்.

குழந்தையைப் பெற்றவுடன் பெருந்தொற்று காரணமாக தாய் இறந்துவிடுகிறார். அதனால் பிறந்து ஒரு நாளேயான குழந்தைக்கு தாய்ப்பால் தர யாரேனும் முன்வாருங்கள் என ட்விட்டரில் கோரிக்கை விடப்படுகிறது. இந்தக் கோரிக்கையைப் பார்த்து பேச்சற்றுப் போனேன்.

நான் வருகிறேன் என்று வருகிறார் ஒரு பெண். அவர் யார் தெரியுமா? சி.ஏ.ஏ போராட்டத்தின்போது, கர்ப்பிணியென்றும் பாராமல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் பயின்ற சஃபூராவை சிறையில் அடைத்ததில்லையா இந்தக் கொடுங்கோல் அரசு. அவரே தான்!

தாய்ப்பால் தர அவர் மதம் பார்க்கவில்லை. ஆனால் இந்தத் தேசம் அவருக்கு இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்துக்காக சிறைவாசத்தை தந்தது. அவர் இத்தேசத்திற்கு எதைத் திருப்பித் தருகிறார் பாருங்கள்.


இந்த பதிவு நெகிழ்ச்சியூட்டியது. 

அவரே இது தொடர்பாக இன்னொரு பதிவையும் பகிர்ந்து கொண்டிருந்தார். 

அது


என் முந்தைய பதிவில், தாய் இறந்ததால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்த சஃபூரா குறித்து எழுதி இருந்தேன். தாய்ப்பால் தர முன்வந்ததற்கு சங்கி ஒருவரின் மனிதநேயமற்ற எதிர்வினை இது.
'விஷப்பாலை அருந்துவதை விட பேசாமல் பால் குடிக்காமலேயே இருக்கலாம் அக்குழந்தை' என்கிறான் அந்த மதவெறியன்.
யார் விஷம் என்பதை நாங்கள் அறிவோம்.

சங்கிகள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதற்கும் மத வெளி விஷம் எந்தளவுக்கு அவர்களிடம் ஊறியுள்ளது என்பதற்கும் இது இன்னொரு சான்று.

No comments:

Post a Comment