Sunday, May 30, 2021

தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் . .

 


சங்கிகளின் மொழியிலேயே அவர்களோடு பேச வேண்டியுள்ளது.

மோடி ஆட்சியின் அவலங்களை விமர்சிப்பவர்களை "பாகிஸ்தானுக்குப் போ" என்றும் "தேச விரோதி" என்றும் வாய் கூசாமல் பேசிய கேடு கெட்டவர்களை அவர்கள் மொழியிலேயே பேசுவது தவறாகவும் தோன்றவில்லை.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்த நாள் முதல் புலம்பிக் கொண்டிருப்பவர்கள் சங்கிகள்தான்.

எப்படி ராகுல் காந்திக்கு பப்பு என்றொரு பிம்பத்தை கட்டமைத்தார்களோ, அதே போல "தத்தி, உளறு வாய், துண்டுச்சீட்டு பேச்சாளர், சுடலை, சின்ன மேளம்" போன்ற பிம்பங்களை இவர்கள் ஸ்டாலினுக்கு கட்டமைத்தார்கள். அது எடுபட்டதோ, எடுபடவில்லையோ, இவர்களாகவே அந்த பிம்பச்சிறைக்குள் சிக்குண்டு திமுக வெல்ல வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். 

ஆனால் தேர்தல் முடிவுகள் மாறாக வந்ததில் சங்கிகளால் அதிலும் உள்ள மேட்டுக்குடிகளால் அதனை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று இன்றோடு இருபத்தி நான்கு நாட்கள்தான் ஆகிறது. ஒரு சரியான திசை வழியில்தான் ஆட்சியின் துவக்க நடவடிக்கைகள் அமைந்துள்ளது. அது இவர்களுக்கு பொறுக்கவில்லை. 

அதற்குள்ளாக அவர் பதவி விலக வேண்டும் என்று கூச்சல் போடுகிறார்கள். தமிழர்களை பொறுக்கி என்று சொல்லும் சுனாசாமி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஆளுனருக்கு கடிதம் எழுதுகிறார்.

மத்யமர் போன்ற குழுக்களில் வெறி கொண்டு பதிவு எழுதுகிறார்கள். 

இவர்களுக்கெல்லாம் சங்கி பாணியில்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

"உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நீங்கள் தமிழகத்தை விட்டு தாராளமாக வெளியேறுங்கள்"

மாட்டிற்கு மரியாதை கொடுக்கும் மொட்டைச் சாமியாரின் உபி உங்களை நிச்சயம் வரவேற்கும்.


No comments:

Post a Comment