Saturday, May 15, 2021

நங்கு நங்குன்னு நாலு குத்து

 


திருந்த மாட்டான். மாரிதாஸ் திருந்தவே மாட்டான். 



தன் உடல் முழுக்க அழுக்கை வைத்துக் கொண்டு, ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை சிறு துரும்பும் கிள்ளிப் போடாத பிரதமரை புகழ்ந்து கொண்டு, ஆட்சிக்கு வந்த நொடி முதல் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற முதல்வரைப் பார்த்து பழி போட இந்த ஜென்மத்திற்கெல்லாம் எப்படித்தான் மனம் வருகிறதோ? மாரிதாஸ் மட்டுமல்ல "மத்யமர்" குழு மேட்டுக்குடி சங்கிகள் எல்லோரும் இவனைப் போலத்தான் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உருப்படியாக எதையும் செய்ய இயலாதவர்கள், செய்பவர்களை குறை சொல்லிக் கொண்டே லைம்லைட்டில் இருக்க முயல்கிறார்கள். அதற்காக எப்படிப்பட்ட கட்டுக்கதை கூறவும் தயங்க மாட்டார்கள். அப்படிப்பட்ட  மாரிதாஸ் போன்றவர்களை என்ன செய்யலாம்?

அவனின் பதிவை படித்ததும் மேலே உள்ள வீரம் படக்காட்சியில் அஜித் தம்பி ராமையாவை நங்கு நங்கு என்று போட்டு பிரட்டி எடுத்தது போன்ற சிகிச்சையை திமுகவினர் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

கே.ஆர்.அதியமான் எனும் பொருளாதார மேதையை முக நூலில் இருந்தே ஓட வைத்தவர்கள், மாரிதாஸ், கிஷோர்.கே.சுவாமி ஆகியோரை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது புதிராகவே உள்ளது.

2 comments: