Tuesday, May 25, 2021

சங்கி புகுந்த லட்சத் தீவை பாதுகாக்க . . .

 



குமரி மாவட்ட மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் முக்கியமான, விரிவான பதிவு. 

ஆமை புகுந்த இடம் உருப்படாது என்பதற்கு ஆதாரமில்லை. ஆனால் சங்கி புகுந்த இடம் உருப்படாது என்பதற்கு இன்னும் ஒரு புதிய சான்று லட்சத்தீவு.

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை லட்சத்தீவு மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள்...32சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தீவு...
2011மக்கள் தொகை கணக்கெடுப்பு படி,மக்கள் தொகை 64,473பேர்.. இப்போது2021ம் ஆண்டு அதிக பட்சம் 70000பேர் இருக்கக்கூடும்; இவர்களில் 99%பேரும் பட்டியல் இன மக்கள்(SC Tribes)என்பது பலருக்கும் தெரியாது; ஆனால் அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்..

லட்சத்தீவில் சொத்துக்களை வேறு யாரும் வாங்க முடியாது என்பது கூட பலருக்கும் தெரியாது...

மிகவும் அழகான தீவு....
அழகான மக்கள் கூட்டம்...
சிறைச்சாலைகளும், காவல் நிலையங்களும் காலியாகவே கிடந்தன...
மது விலக்கு அமுலில் இருந்தது...
குற்றம் புரிவோர் இல்லை என்றே கூறலாம்..'

இந்தியாவிலேயே Crime Rate இல்லை என்ற சூழல் நிலவியது லட்சத்தீவில்...
மீன் பிடித்தலும்,தேங்காய் வியாபாரமும் தான் முக்கியமான தொழில்...

விவசாயம் செய்ய முடியாத நிலப்பரப்பு என்பதால் இயற்கையாகவே முக்கிய உணவு மீனும், மாட்டுக்கறியும் தான்..

2020டிசம்பர் மாதம் வரை கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லை....
லட்சத்தீவு ஒரு Union Territory என்பதால் அதன் நிர்வாகப் பொறுப்பு, Administrator என்ற நிர்வாகிக்கு...

தினேஷ் ஷர்மா என்ற Administrator கடந்த டிசம்பர் மாதம் மரணமடையும் வரை எல்லாம் நன்றாகவே நடந்தது...

தொடர்ந்து, பிரபுல் கோடா பட்டேல் என்ற பாஜக நபர் இங்கே பொறுப்பேற்ற உடனே லட்சத்தீவில் அனைத்தும் தலை கீழாகிப் போனது...

இந்த Praful Khoda Patel என்பவர், நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நெருங்கிய நண்பர் என்பது மட்டுமல்ல, மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது இந்த பட்டேல், உதவி உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தவர், என்ற செய்தியே லட்சத்தீவில் என்னென்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியும்...

வந்த உடனே, பிரபுல் கோடா பட்டேல், SOP (Standard Operating Procedure)என்ற கோவிட் நடைமுறைகளை ரத்து செய்தார்; இப்போது கொரோனா தொற்று லட்சத்தீவை மிரட்டி வருகிறது..

LDAR (Lakshadweep Development Authority Regulations)என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.. இந்த சட்டத்தின் படி, லட்சத்தீவில் வசிக்கும் எவரையும் எந்த காரணமும் கூறாமல், நிலத்திலிருந்து வெளியேற்றவோ அல்லது மாற்று இடத்தில் வசிக்கவோ உத்தரவிடலாம்..

குற்றம் புரிவோர் இல்லாத லட்சத்தீவில்,PASA(Lakdhadweep Anti-Social Activity)என்ற Regulations)என்ற சட்டத்தின் கீழ், எவரையும் காரணம் எதுவுமே இல்லாமல் கைது செய்து, ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கலாம்..

Draft Panchayat Notification என்ற பெயரில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Lakshadweep Animal Preservation Regulations என்ற பெயரில் கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தின் திரை மறைவில்,

நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மாட்டுக்கறி வைத்திருக்கவோ, பாதுகாக்கவே, கொண்டு செல்லவோ கூடாது...
மீறினால் மாட்டுக்கறி பறிமுதல் செய்யப்படுவதோடு, கைது செய்யப்பட்டு,10ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்..
1லட்சம் ரூபாயிலிருந்து 5லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்...

பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வேளையில் மாட்டுக்கறி வழங்கப்பட்டு வந்தது, இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது..

38க்கு மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு விட்டன..

சுற்றுலா என்ற பெயரில் சாராயக்கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது..
190க்கு மேற்பட்ட சுற்றுலா துறை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..
பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்களையும், உடற்பயிற்சி ஆசிரியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது புதிய நிர்வாகம்..

கடற்கரையின் அழகு கெட்டுப்போகிறது என்ற பெயரில்,மீனவர்கள் தங்களது வலைகள் உட்பட மீன் பிடி கருவிகளை பாதுகாக்கும் கூடங்கள்(Sheds)அனைத்தையும் பிய்த்து வீசிவிட்டது புதிய நிர்வாகம்.....

பவழப் பாறைகளையும், இயற்கையின் பேரழகையும் கொண்ட லட்சத்தீவின் கடற்கரையையும், நிலப்பரப்பையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தங்கத்தட்டில் வைத்து தாரை வார்த்து கொடுக்க அனுப்பப்பட்ட நபர் தான் இந்த Praful Khoda Page என்ற Administrator..

நீண்ட நெடுங்காலமாக, லட்சத்தீவு மக்கள் தங்களது வணிகம் அனைத்தையும் கேரள மாநிலம் பேப்பூர் துறைமுகம் வழியாகவே செய்து வருகின்றனர்; இனி மேல், இப்போது அனைத்தும் மங்கலாபுரம் துறைமுகம் வழியே தான் நடக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டுள்ளது புதிய நிர்வாகம்..வணிகம் அனைத்தையும் கேரளாவிலிருந்து அப்படியே கர்நாடகாவுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்பது தான் இவரது நோக்கம்...பண்பாட்டு ரீதியாக லட்சத்தீவு மக்களின் கேரள உறவையும் தொடர்புகளையும் துண்டித்து விடுவதும் கூட இவர்கள் நோக்கம்...

லட்சத்தீவு மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை இப்போது லட்சத்தீவு நிர்வாகம் தான் முடிவு செய்கிறது...

லட்சத்தீவுமக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் Administrator ன் நடவடிக்கைகளை மிகக்கடுமையாக கண்டித்து கேரளாவில் முதல்வர் தோழர்:பிணறாயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோழர்:எளமரம் கரீம், தோழர்:A.M.ஆரிஃப் ஆகியோர்,பிரபுல் கோடா பட்டேலின் நடவடிக்கைகளை கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இந்த மனிதர் திரும்பி அழைக்கப்பட வேண்டும் என்று தங்களது கடிதங்களில் குறிப்பிட்டுள்ளனர்...

வளர்ச்சி என்ற பெயரில் லட்சத்தீவை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அப்படியே தூக்கி கொடுத்து விட துடிக்கும் பட்டேலின்பேராசையை முறியடிக்க வேண்டும்..

மீண்டும் ஒரு காஷ்மீர் தெற்கே வேண்டும் என்ற நப்பாசையுடன் நாக்கை நீட்டிக்கொண்டு வரும் கயமைத்தனத்தை எதிர்க்கவில்லை என்றால், மற்றொரு நாளில்,இவர்கள், நமது வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள்....

உடனடியாக லட்சத்தீவிலிருந்து, இந்த Proful Khoda Patel என்ற நிர்வாகியைமத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் ..

*Praful Khoda Patel என்ற இவர் சாதாரணமான நபர் அல்ல.. டயூ டாமன் போன்ற இடங்களில் என்னென்ன செய்தார் என்பதை நாளை பார்ப்போம்..#ShahulHameed

No comments:

Post a Comment