Tuesday, May 25, 2021

ரஜினி சகலையிடம் சொன்னதென்ன?

 


பள்ளிக் கட்டிடத்திற்கு வாடகை தராத, ஆசிரியர்களுக்கு சம்பளம் தராத ரஜினிகாந்த், தன் சகலை நடத்தும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்ததும் என்ன சொல்லி இருப்பார் என்ற கற்பனையே மேலே உள்ள படம்.

ஆனால் இது காமெடியாக பார்க்க வேண்டிய செய்தி அல்ல. இந்த பள்ளி மீது கடந்த காலங்களிலும் கூட மாணவர்கள் இறப்புக்கள்     மறைக்கப் பட்டுள்ளதாக தீவிரமான குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளது.  கோவை கிளை மீது கடந்த ஆண்டு சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அதிகாரத்திற்கு நெருக்கமாக இருந்தால் என்ன வேண்டுமானால் செய்யலாம் என்ற ஆணவத்திற்கு முடிவுரை எழுத வேண்டிய நேரம் வந்து விட்டது.

பி.எஸ்.பி.பி துரோணாச்சார்யர்கள் என்ற வாட்ஸப் குழுவில் பரிமாறப் பட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.



இது உண்மையென்றால் நிலைமை ரொம்பவும் மோசம் என்றே அர்த்தம். தங்களைப் பாதுகாக்க, தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள இந்த நவீன துரோணாச்சார்யர்கள் கட்டை விரலோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள், தலையையே காவு கேட்பார்கள். 

No comments:

Post a Comment