Tuesday, May 18, 2021

மனங்களில் இருப்பார் மகத்தான கதை சொல்லி

 


தமிழின் வாசகர் யாரும் அவரது படைப்புக்களை படிக்காமல் கடந்து வந்திருக்க முடியாது.

வட்டார மொழியில் எழுதுபவர்களுக்கான முன்னத்தி ஏர்.

எல்லோராலும் நேசிக்கப்பட்ட ஒரு படைப்பாளி.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம், "இருண்ட காலக் கதைகள்" சிறுகதை தொகுப்பு இணைய வழியில் நடைபெற்ற போது ஒரு பார்வையாளராக முழுமையாக பங்கேற்று ஆச்சர்யப்படுத்தினார்.



கோவில்பட்டி சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் தோழர் சீனிவாசனுக்கு ஆதரவான கரிசல் எழுத்தாளர்களின் அறிக்கையின் முதல் கையெழுத்து அவருடையதுதான்.

ஞான பீட விருது இன்னும் வந்து  சேராததும் நூற்றாண்டை நெருங்கியும் தொடாமல் போனதும்தான் வருத்தமளிக்கிறது.

ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.

அவரது படைப்புக்கள் மூலம் வாசகர்கள் நெஞ்சில் அவர் வாழ்ந்திருப்பார்.

1 comment:

  1. தன் எழுத்துக்களால் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்

    ReplyDelete