Saturday, February 2, 2019

மாட்டு மூளைகள் மனித உரிமையை மதிக்காது


பேஷ்வாக்களை தலித்துக்களின் மஹர் ரெஜிமெண்ட் வெற்றி கொண்டதை நினைவு கூறும் பீமா கோரேகான் வெற்றிச் சின்னத்தில்  இருநூறாவது ஆண்டை கொண்டாடியதில் இருந்தே வெறி கொண்டு அலைகிறது மோடி அரசு. மனித உரிமை செயற்பாட்டாளர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அங்கே நடந்த கலவரத்துக்குக் காரணமான காவிகளுக்குப் பதிலாக கொஞ்சமும் தொடர்பில்லாத மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தலித் மக்கள் மத்தியில் பணியாற்றுபவர்கள் ஆகியோரை கைது செய்கிறது. 

அண்ணல் அம்பேத்கரின் உறவினரும் அறிவு ஜீவியுமான தோழர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களை கைது செய்ய துடித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர் முன் ஜாமீன் வாங்குவதற்கு வசதியாக அவருக்கு நான்கு வார அவகாசம் அளிக்கும் ஆணையை 14.01.2019 அன்றுதான் உச்ச நீதி மன்றம் வழங்கியது.  

ஆனாலும் கூட  இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரத்தில் ஈடுபட்ட கிரிமினல் குற்றவாளிகள் அனைவர் மீதான வழக்குகளையும் சில தினங்கள் முன்பாகத்தான் மொட்டைச் சாமியார் வாபஸ் வாங்கினார்.

காந்தி கொலையை மறு உருவாக்கம் செய்த பூஜா சாமியார் தலை மறைவாகி விட்டார்.

முகமது அக்லக்கை அடித்துக் கொன்ற மாட்டுக் குண்டர்களுக்கு என்.டி.பி.சி நிறுவனத்தில் வேலை பரிசாக வழங்கப்பட்டது.

ஆனால் உச்ச நீதி மன்ற உத்தரவு இருந்த போதும் ஒரு அராஜகக் கைது நடந்துள்ளது.

மாட்டு மூளை கொண்ட மோடி வகையறாக்கள் மனித உரிமையை மதிக்கத்தான் செய்யாது.

தோழர் ஆனந்த் டெல்டும்ப்டே கைதை கண்டிப்போம்.
விடுதலை செய் என்று குரல் கொடுப்போம்.


3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை. உனக்கும் மூளை இருக்கத்தான் செய்கிறது. எந்த பதிவில் உனது வக்கிரத்தை வெளிப்படுத்த வேண்டுமோ, அதில் மௌனமாக இருந்து விட்டு மற்ற பதிவுகளில் வந்து குரைத்துள்ளாய். ஆனாலும் உன் வெறி நீ ஒரு முட்டாள் என்பதையும் நிரூபித்து விட்டது.

      நீயே உன் முற்போக்கு முகமுடியை கழட்டி ஒரு கடைந்தெடுத்த பொம்பளைப் பொறுக்கி என்பதை வெளிப்படுத்திக் கொள்ளும் நாள் விரைவில் வரும்.

      Delete