Friday, February 1, 2019

பாரதி பாடல்தான் பதில் . . .



ஜாக்டோ ஜியோ போராட்டம் முடிவுற்ற சூழலில் ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறி பல பதிவுகள் வேகமாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. 

அதிலே சொல்லப்பட்ட ஒரு அறிவுரை உங்கள் மாணவர்களுக்கு பெரியார், மார்க்ஸ், லெனின் பற்றி சொல்லிக் கொடுங்கள் என்பது. இது மிகவும் சரியானது. இதிலே எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. 

ஆனால் இதைச் சொல்வதற்கு முன்பாக சொல்லப்பட்ட ஒரு விஷயத்தில்தான் நெருடல் வருகிறது.

ஆசிரியர்களே, நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் பாரதியார், விவேகானந்தர், சங்கராச்சாரி ஆகியோரை குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

எந்த ஒரு ஆசிரியரும் சங்கராச்சாரியையோ அல்லது விவேகானந்தரையோ உயர்த்திப் பிடிப்பதாகத் தெரியவில்லை. பாரதியை மட்டும் தனித்துச் சொல்லக் கூடாது என்பதற்காக மீதமுள்ள இருவரையும் இணைத்துள்ள மோசமான உத்தியாகத்தான் பார்க்கிறேன்.

பாரதி வாழ்ந்த காலத்தின் சமூகச் சூழலைப் பற்றி கொஞ்சமும் கருதாமல் பாரதிக்கு ஒரு பிற்போக்கு முத்திரை அளிக்கும் மோசமான அணுகுமுறையை மதிமாறன் வகையறா ஆட்கள் என்றைக்கு நிறுத்தப் போகிறார்களோ?

அந்த சந்தர்ப்பவாத கபடவேததாரிகளுக்கான பதிலை பாரதியே தன் பாடல்களில் சொல்லி விட்டு போயுள்ளான். . 



No comments:

Post a Comment