Monday, February 25, 2019

எரிந்த கார்கள் - ஒரு சந்தேகம்




சனிக்கிழமை அன்று பெங்களூரில் 300  கார்கள் எரிகிறது.

ஞாயிறு அன்று சென்னையில் 200 கார்கள் எரிகிறது.

பெங்களூரில் எரிந்த கார்கள் எல்லாம் விமானப் படையின் சாகஸத்தைப் பார்க்க வந்த பார்வையாளர்களின், மக்களின் கார்கள்.

இங்கே சென்னையில் எரிந்து போனதோ  ஒரு குறிப்பிட்ட கால் டாக்ஸி நிறுவனத்திற்கு சொந்தமான கார்கள். அந்த நிறுவனம் போணியாகாமல் நஷ்டத்தில் செயல்பட்டு  மூடப்பட்ட ஒரு நிறுவனம். அந்த கார்கள் எல்லாம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தவை.

இத்தனை நாட்களாக ஒன்றும் நடக்கவில்லை. பெங்களூர் சம்பவம் நடந்து மறு நாளே நடக்கிறது என்றால் சந்தேகமாக இருக்கிறது.

வாங்கிய கடனை திருப்பி கட்டாமல் ஏமாற்றவோ அல்லது பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளிடமிருந்து பணம் பெறவோ வேண்டுமென்றே கொளுத்தப்பட்டதா என்று சந்தேகம் வருகிறது.

அந்த டாக்ஸி கம்பெனிக்கு அரசியல் பின்புலம் உள்ளதா? அதன் உரிமையாளர் யாராவது பெரிய அரசியல் புள்ளியின் பினாமியா ஆகியவற்றைக் கூட போலீஸ் விசாரிக்க வேண்டும்.

ஆனா நம்ம ஊர் ஸ்காட்லாண்ட் யார்ட் அதையெல்லாம் செய்யுமா என்பது இன்னும் ஒரு சந்தேகம்.


No comments:

Post a Comment