Saturday, February 2, 2019

மோடியின் 22 வது அடிக்கல் நாட்டு விழா




மோடி ஜும்லா பட்ஜெட்

விரிவாக எழுத வேண்டும். அதற்கு முன்பாக இது இடைக்கால விமர்சனம்.

வருமான வரி உச்சவரம்பு ஐந்து லட்சமாக உயர்த்தப்படும் என்று நம்பி கடந்த வருடம் வரை ஏமாந்தவர்களுக்கு இந்த வருடம் வித்தியாசமான ஏமாற்றம்.

வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்படவில்லை.  ஐந்து லட்சம் ரூபாய் வரைக்குமே வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வரி விலக்கு.

ஆனால் அவசரத்தில் ஊடகங்கள் அறைகுறையாக செய்தியை வெளியிட  அதை நம்பி ஏமாந்தவர்கள் ஏராளம்.  நம்பியவர்களை இப்படி எல்லாம் ஏமாற்ற மோடியால் மட்டுமே முடியும்.

ஆறரை லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் சேமித்தால் வருமான வரி கட்ட வேண்டாமே என்று யாரும் சொல்லாதீர்கள்.

சேமித்தால் – ஆம் சேமித்தால் மட்டுமே.

விவசாயிகளுக்கான பட்ஜெட்டாம்.

இவர்களிடம் என்ன கேட்டோம்? இல்லையில்லை, என்ன செய்வதாக சொன்னார்கள்?

உற்பத்திச்செலவை விட கூடுதல் 50 % சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயம் செய்வது.

என்ன கொடுத்துள்ளார்கள்?

குடும்பத்திற்கு மாதம் ஐநூறு ரூபாயாம். அதுவே கைக்கு வரும் நாள் வரை நிச்சயமில்லை. இந்த தொகையை வைத்து பூச்சி மருந்து வேண்டுமானால் வாங்கலாம். அதைத்தான் மோடியும் விரும்புகிறார் போல.

மாதம் நூறு ரூபாய் கட்டி முப்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பிறகு மூவாயிரம் ரூபாய் பென்ஷன் என்ற திட்டத்திற்கு அண்ணன் “என்னத்த கன்னையா “வசனம்தான் பொருத்தம்

வரும். ஆனா வராது.

ஹரியானாவில் இருபத்தி இரண்டாவது எ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனை அமைக்கப்படுமாம்.

ஹலோ, இருபத்தி இரண்டாவது அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும்னு சொல்லுங்க.

இதுவரைக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்த எதுக்கும் நிதியே ஒதுக்கலை. மதுரைக்கும்தான்.

வாயால் வடை சுடுவது எப்படி என்பதை உலகில் உள்ள ஆட்சியாளர்கள் எல்லாம் மோடியிடம் கற்றுக் கொள்கிறார்களாம்.

பட்ஜெட் உரையை முழுமையாக படிக்க வேண்டும். அதிலும் பொடி எழுத்துக்களில் யாருடைய கவனத்திற்கும் வராதது போல ஏதாவது இருக்கும். அதில்தான் மோடி தன் எஜமானர்களுக்கான விஸ்வாஸம், பேட்ட எல்லாவற்றையும் காண்பித்திருப்பார்.

No comments:

Post a Comment