Wednesday, March 21, 2018

காடே கவிதை . .காடன்றி . . .


உலக கவிதை தினமாம் இன்று -
சொல்கிறார்கள்.

உலக காடுகள் தினமும் இன்றுதானாம் -
சொல்கிறார்கள்.

காட்டைப் பற்றி கவிதை?
காட்டிற்குள் சென்று கவிதை?

காடுகள் கொன்று
நாடுகள் வளர்க்கும்
நாட்கள் இப்போது . . .

இன்னும் உயிர் வாழும்
காடுகளே கவிதைகள்.

காடுகள் வாழ்ந்தால்
கவிதைகள் வாழும்.

காடுகளைக் காதலித்தால்
கவிதைகளும் ஊற்றெடுக்கும்.

காடே கவிதை . .
காடன்றி ஏது கவிதை ???

இயற்கைக்கு வேண்டாம்
இனி இரங்கற்பா

2 comments:

  1. காடுகள் அழித்து ஆன்மிகம்(?) வளர்க்கும்
    தாடிகள் ஒழிந்தால் கானகம் வாழும்...

    🌸🌸🌸

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழர்.
      அதுதான்
      போன வருடம் எழுதியது

      https://ramaniecuvellore.blogspot.in/2017/03/blog-post_31.html

      Delete