Sunday, March 25, 2018

மதச்சார்பின்மை என்றால் கெட்ட வார்த்தையா?



காவிகளை அம்பலப்படுத்தி எந்த பதிவு எழுதினாலும் ஒரு அதிமேதாவி அனாமதேயம் ஆங்கிலத்தில் வன்மமாக ஏதாவது உளரி விட்டு போகும்.

ராமராஜ்ய ரதயாத்திரை என்ற பெயரில் காவிகள் நடத்தும் கலவர யாத்திரையின் ரதமே விதிகளை மீறி வடிவமைக்கப் பட்டது என்ற பதிவில் அந்த அனாமதேயம் வழக்கம் போல மதச்சார்பின்மையை நேசிப்பவர்களை அசிங்கமாக திட்டி உள்ளது.

பதில் சொல்ல முடியாத போது ஆபாச வசையில் இறங்குவது என்பதுதான் அனாமதேயங்களின் வழக்கம் என்பது ஒரு புறம் இருக்க 

மதச்சார்பின்மை 

என்ற வார்த்தையே கேட்டாலே இவர்கள் இப்படி கதி கலங்குகிறார்கள்? பதட்டப்படுகிறார்கள்? வெறி தலைக்கேறி உளறுகிறார்கள்?

அப்படி அவ்வளவு கெட்ட வார்த்தையா மதச்சார்பின்மை?

அரசியல் நடவடிக்கைகளிலும் அரசின் நடவடிக்கைகளிலும் மதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் 

அரசியல் லாபங்களுக்காக மத உணர்வுகளை தூண்டக் கூடாது

இதுதான் மதச்சார்பின்மை.

மத உணர்வுகளை தூண்டுவதை மட்டுமே தங்களின் ஒரே அரசியல் உத்தியாக வைத்திருக்கிற காவிகளால் எப்படி மதச்சார்பின்மையை சகித்துக் கொள்ள முடியும்?

அவர்களின் பிழைப்பே அடிபட்டு விடுமே!

அதனால்தான் காவிகளும் அவர்களை முட்டாள்தனமாக நம்புகிற வேறு சிலரும் கூட மதச்சார்பின்மையை வெறுக்கிறார்கள். 

இந்திய மக்களின் ஒற்றுமை நீடிப்பதற்கான ஒரே அடித்தளம் மதச்சார்பின்மையும் மத நல்லிணக்கமும்தான்.

அதனை சீரழிக்க முயலும் காவிகளை தொடர்ந்து விமர்சித்தும் அவர்களது கேவலமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருப்பேன்.

அனாமதேயங்கள் ஆங்கிலத்தில் ஆபாசமாக திட்டினாலும் கூட

2 comments:

  1. மதசார்பின்மை என்றால் குறிப்பிட்ட மதத்தை மட்டும் தாக்குவது என்று பொருள் தருமா ?

    யுவதர்சனன்

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஒரு தவறான புரிதல்தான்.

      Delete