Thursday, March 28, 2024

CAA - வரம் அருளும் பூசாரிகள்

 


குடியுரிமைச்சட்டத்தின்படி குடியுரிமை வேண்டும் என்று விண்ணப்பம் கொடுப்பவர்களின் மதம் என்ன என்பதை உறுதி செய்யும் சான்றிதழை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில், சர்ச் அல்லது வழிபாட்டுத் தளத்தின் பூசாரிகள் கொடுத்தால் போதுமாம்.

மேலே உள்ள செய்தி இன்றைய ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்க செய்தி.

ஆக, இனி பூசாரிகள் காட்டில் மழைதான்.. பண மழைதான் . . .

ஏன் எந்த மதம் என்பது முக்கியமாகிறது.

பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த இந்து, கிறிஸ்துவர், சீக்கியர், பார்ஸி, புத்த, ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.

இந்நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இஸ்லாமியர்களோ, மியன்மர், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்த எந்த மதத்தவரும் விண்ணப்பிக்கவே முடியாது.

குடியுரிமைச்சட்டத்தின் முதல் கோணல் இதுதான்..

No comments:

Post a Comment