Friday, March 29, 2024

பணப்பூர் வேலை நாளும் AFSPA தொடர்வதும்

 


நேற்று இரவு முழுதும் மணிப்பூர் ஆளுனர், 41 % கிறிஸ்துவர்கள் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில், இன்னமும் அமைதி திரும்பாத ரத்த பூமியில் ஈஸ்டர் பண்டிகை அன்று அலுவலக நாளாக அறிவித்து உருவாக்கிய சர்ச்சைதான் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தது. பின்பு அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்த சர்ச்சையின் பின்னணியில் வேறு ஏதோ வில்லங்கத்தை சத்தம் இல்லாமல் பில்லா ரங்கா கூட்டணி செய்திருக்கும் என்று சந்தேகம் வந்தது.

ஆம். நிஜம்தான்.

இன்றைய செய்தித்தாள் உண்மையைச் சொன்னது.

ராணுவத்திற்கு தரப்பட்டுள்ள கொடூரமான, ஜனநாயக விரோதமான ராணுவப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் நாகாலாந்து மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் இன்னும் ஆறு மாதத்திற்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு ஒரு நாள் முன்பாக AFSPA ஐ திரும்பப் பெறுகிறோம் என்று அமித்ஷா வஜனம் பேசியுள்ளார்.

மக்களின் சுதந்திரத்தை பறிக்க, யாராலும் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தை கொடுத்துள்ள ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?

சிந்திப்பீர்

No comments:

Post a Comment