Tuesday, March 19, 2024

ஆழ்ந்த அனுதாபங்கள் தமிழிசை

 


தோற்றுப் போன ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் ஜாக்பாட் பரிசு கவர்னர் பதவி. உங்களுக்கும் சந்திரசேகர் ராவிற்கும் பிரச்சினை என்பதால்”தாமரை மலர்ந்தே தீரும்” என்று தொண்டை வறண்டு போகும் அளவு கத்தியதால் பாண்டிச்சேரி கவர்னராக எக்ஸ்ட்ரா போஸ்டிங் வேறு கொடுத்தார்கள்.

ஆனால்  நீங்கள் அதையெல்லாம் ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்க தயாராகி விட்டீர்கள்?

எங்கே நிற்கப் போகிறீர்கள் தமிழிசை மேடம்?

ஸ்டெரிலைட் வேதாந்தா முதலாளி அனில் அகர்வாலிடம் வாங்கிய எலும்புத்துண்டுக்காக  பனிரெண்டு பேரை சுட்டுக் கொன்றீர்களே அந்த தூத்துக்குடியிலா? போன முறை கனிமொழி அவர்களிடம் தோற்றுப் போன அதே தொகுதியிலா? ஊரே மூழ்கிப் போனாலும் மோடி எட்டிக்கூடப் பார்க்காத அந்த தூத்துக்குடியிலா?

நீலகிரித் தொகுதியின் கன்பர்ம்ட் வேட்பாளர் என்று சொல்லப்பட்டு வந்த எல்.முருகன், ஆட்டுக்காரனின் அளப்பை நம்பாமல், துண்டைக் காணோ, துணியைக் காணோம் என்று தலை தெறிக்க ஓடி மத்தியப் பிரதேசத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினரானதை பார்த்துமா ரிஸ்க் எடுத்துள்ளீர்கள்?

பாண்டிச்சேரி தொகுதியில் நிற்பீர்களோ?

பாண்டியைப் பொறுத்தவரை நீங்கள் வெளியாள். உங்கள் கட்சி ஆட்களே உங்களுக்கு சீட் கிடைக்க விட மாட்டார்கள். அப்படியே மேலிடச் செல்வாக்கு மூலம் கிடைத்தாலும் உங்கள் கட்சி ஆட்களும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்களுமே உங்களை தோற்கடித்து விடுவார்கள்.

இந்த முறை தோற்றுப் போனால் இன்னொரு முறை கவர்னர் பதவி தர மோடியே ஜெயிக்கப்போவதில்லை.

ஆக உள்ளதையும் எதிர்காலத்தையும் இழந்து நொந்து போகப்போவதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

No comments:

Post a Comment