Tuesday, March 19, 2024

ரோட் ஷோ - என்ன ஆட்டுக்காரா இதெல்லாம்?

 


மோடி நேற்று நடத்திய சாலைக் காட்சி அதாங்க ரோட் ஷோ பற்றி சங்கிகள் ஆஹா, ஓஹோ என்று பீற்றிக் கொண்டிருந்தார்கள்.

அது வழக்கம் போல வெற்று பீற்றல் என்பதை இரண்டு தோழர்களின் முகநூல் பதிவுகள் அம்பலப்படுத்தியது.

வங்கி ஊழியர் சங்கத்தலைவரும் எழுத்தாளருமான தோழர் ஜா.மாதவராஜ்

கோயம்புத்தூர் ‘Road Show'வை கொஞ்ச நேரம் பார்த்தேன். வாங்கிக் கொடுத்த பூக்களை வாரியிறைத்துக் கொண்டும், மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டும், தேமே என்றும் இரண்டு கரையோரங்களிலும் ஒற்றை வரிசையில் மெலிதாய் கூட்டம் நிற்க, அவர்களுக்குப் பின்னால் ஒரு கூட்டம் எதோ மாரத்தான் போல கூடவே ஓடிக்கொண்டே வந்தார்கள். இரு கரையோரமும் அடர்த்தியாய் கூட்டம் இருப்பது போல காட்டுவதற்காக ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இரண்டரை கி.மீ தூரமும் விதியே என்று ஓடிக்கொண்டிருந்தார்கள். வெறும் show.
இதைத்தான் ஆங்கில ஊடகங்கள் Mega show என்றும், stunning crowd என்றும் ஊதிக்கொண்டிருந்தன.

வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள்

மோடி வருகைக்கு நான் நினைத்த அளவுக்கு கூட்டத்தை காணோம். பெரும்பாலும் ஆர் எஸ் புரம் வட இந்தியர்கள், திருப்பூரில் இருந்து அழைத்து வரப் பட்ட மக்கள். ஜெயலலிதா கோவை விவசாய கல்லூரிக்கு வரும் போது கூடும் மாபெரும் கூட்டங்களை பார்த்த கண்களுக்கு இது ஒன்றுமே இல்லை.

இவ்வளவு நாள் அதிமுக தான் பிஜேபியை பெரிய கட்சி போல காட்டிக் கொண்டு இருந்திருக்கிறது.

ஒரு பிரதமர் எவ்வளவு விஷயங்கள் பேச வேண்டி இருக்கும். Voc மைதானத்தில் கூட்டம் நடத்தி இருந்தால் நானெல்லாம் கூட போய் பார்த்து இருப்பேன். ரோடு ஷோ என்று அவர் பேசவே இல்லை. பெரும்பாலும் வீடுகள் இல்லாத வணிக பகுதிகள் வழியே காரில் செல்வது என்ன உத்தி என்று தெரியவில்லை.

கோவையில் ஆளாளுக்கு பிஜேபி என்று சுற்றுவது போலத் தெரிந்தாலும் உண்மை நிலை வேறு போலிருக்கிறது.

இத்தனை தடவை கோயம்பத்தூர் வந்த மோடிக்கு வெடிகுண்டுல இறந்தவங்களுக்கு அஞ்சலி செலுத்தனும்னு இப்போதான் ஞானோதயம் வந்ததா என்று கேட்டு வேற மானத்தை வாங்கறாங்க.

இதெல்லாம் பரவாயில்லை ஆட்டுக்காரா! மோடிக்கு என்ன வண்டி ஏற்பாடு செஞ்சிருந்த? அதில என்ன மாதிரி அலங்காரம் செஞ்சிருந்த?


தமிழ்நாட்டில் இந்த மாதிரி அலங்காரத்தை வண்டிகளில் எந்த சந்தர்ப்பங்களில் செய்வாங்கன்னு உனக்கும் தெரியலை. உன் அல்லக்கைகளுக்கும் தெரியலை. அந்த எழவை எதுக்கு என் வாயால சொல்லனும்!

நீ முட்டாள்னு நிரூபிச்சிக்கிட்டே இருக்க! இதுல உன்னை நம்பி தமிழிசை அக்கா வேற கவர்னர் பதவிகளை ராஜினாமா செஞ்சுட்டாங்க!

4 comments:

  1. dont be always one side.

    ReplyDelete
    Replies
    1. நான் எப்போதும் ஒரே பக்கம்தான்.
      நியாயத்தின் பக்கம்,
      உண்மையின் பக்கம்,
      நேர்மையின் பக்கம்,
      மக்கள் ஒற்றுமையின் பக்கம்,
      மத நல்லிணக்கத்தின் பக்கம்,
      மதச் சார்பின்மையின் பக்கம்
      , உழைக்கும் வர்க்கத்தின் பக்கம்..

      எப்போதும் காவிக் கயவர்கள் பக்கம் செல்ல முடியாது.

      Delete
    2. dont say to support BJP or modi. I am also against MODI. but your eyes are always blind and no comments so called DMK nor so called communiist (is this still alive in any state , except Kerala) . I am followig so many years your post, all your posts are against BJP/MODI/ ANNAMALAI/ GOVERNOR, ONLY.

      Delete
    3. நிதானமாக பிறகு பதிலளிக்கிறேன்

      Delete