Friday, March 8, 2024

மகளிர் ஒதுக்கீடு -வரும் ஆனா வராது.

 


ஒவ்வொரு ஆண்டும் சர்வ தேச மகளிர் தினத்தின் போது "மகளிர் மசோதாவை நிறைவேற்று" என்பதே முக்கியமான முழக்கமாக இருக்கும்.

இப்போது மசோதா சட்டமாகி விட்டது. ஆனால் அமலாகுமா?

"வரும், ஆனால் வராது" என்ற நிலையை உருவாக்கி விட்டது மோடி அரசு.

இவர்கள் எப்போது மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தி, எப்போது தொகுதி மறு சீரமைப்பை செய்து பின் எப்போது மகளிர் இட ஒதுக்கீட்டை அமலாக்குவது?

தானும் செய்யாமல் அடுத்தவரையும் செய்ய விடாமல் மகளிர் மசோதாவையும் ஜூம்லாவாக மாற்றிய மோடி அரசை வீழ்த்துவதே சர்வ தேச மகளிர் தினத்தன்று நாம் எடுக்க வேண்டிய உறுதி மொழி.

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.

பிகு: காலையிலேயே பதிவிட்டிருக்க வேண்டும். இணைய இணைப்பு சிக்கல் செய்ததால் இப்போது. . .

No comments:

Post a Comment