Monday, March 11, 2024

எஸ்.பி.ஐ எரிந்து போனால் என்ன செய்வார்கள்?

 


ஜூன் மாதம் வரை வாய்தா கேட்ட ஸ்டேட் வங்கிக்கு சவுக்கடி கொடுக்கும் அளவிற்கு உச்ச நீதிமன்றத்தின் கட்டளை அமைந்துள்ளது. தேர்தல் பத்திர விபரங்களை நாளைக்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.



பாஜகவிற்கு எவ்வளவு ரூபாய் யார் மூலமாக வந்தது என்ற தகவல் தேர்தலுக்கு முன்பு  வெளியே வரக்கூடாது என்பதற்காகவே வாய்தா கேட்டது.

 உச்ச நீதிமன்றம் கறாராக இருப்பதால் ஸ்டேட் வங்கி என்ன சென்ன செய்யும்?

 கோர்ட் சொன்னதைக் கேட்டு மோடிக்கு சிக்கலை உருவாக்குமா அல்லது மோடியை தப்புவிக்குமா?

 இன்றிரவு ஸ்டேட் வங்கியின் ஏதாவது ஒரு அலுவலகம் தீப்பிடித்து எரிந்தால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன். தேர்தல் பத்திர ஆவணங்கள் அந்த அலுவலகத்தில்   உள்ள சர்வரில்தான் இருந்தது. அது எரிந்து போனதால் எங்களால் எந்த தகவலையும் தர இயலாது என்று நாளை ஸ்டேட் வங்கி சொன்னாலும் அதில் அதிர்ச்சியடையவோ, ஆச்சர்யப்படவோ ஏதுமில்லை.

 ஏனென்றால் இந்தியாவின் மிகப் பெரிய கிரிமினல்கள் மோடியும் அமித்ஷாவும்.

 பிகு: நான் சொல்வது போல நடந்தால் வினு சக்ரவர்த்தி இடத்தில் உச்ச நீதிமன்றத்தையும் ரஜினி,பிரபு இடத்தில் மோடி, அமித்ஷாவையும் வைத்துக் கொள்ளவும். மாறாக நடந்தால் வினு சக்கரவர்த்தி இடத்தில் மோடியை வைத்துக் கொண்டு ரஜினி, பிரபு இடத்தில் நீதிபதிகளை வைத்துக் கொள்ளவும்.

No comments:

Post a Comment