Saturday, March 23, 2024

உள்ளே அழுகை, வெளியே சிரிப்பு, சங்கி துயரமிது

 


"உள்ள அழுகுறேன், வெளிய சிரிக்கறேன், நல்ல வேஷம்தான், வெளுத்து வாங்கறேன்" என்ற முதல் மரியாதைப் பாடலுக்கு ஏற்றார்போல இரண்டு சங்கிகள் இப்போது உலவுகிறார்கள்.


தென் சென்னை தொகுதியில் நின்று மந்திரியாகும் கனவில் பல காலம் சீன் போட்டு, பிரபலமாக வேண்டும் என்பதற்காக தோழர் சு.வெ மீது அவதூறு விஷம் கக்கி ஜெயிலுக்குப் போன அயோக்கியன் எஸ்.ஜி.சூர்யா. காத்திருந்தவன் காதலியை அமெரிக்க மாப்பிள்ளை கை பிடிப்பது போல அந்த தென் சென்னை தொகுதி கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த தமிழிசை அக்காவிற்கு போய் விட்டது. அந்த சோகத்தை மறைத்து என்னமா தியாகி வேஷம் போட்டுள்ளார் பாருங்கள்.

இரண்டு முறை தோற்றுப் போன பொன்னாருக்கு எம்.பி சீட் தர மாட்டாங்க, நாம பி.ஜே.பி க்கு போனால் கன்னியாகுமரி தொகுதியை தட்டி தூக்கி விடலாம் என்று விளவங்கோடு எம்.எல்.ஏ பதவியை இழந்து பாஜக சென்ற பச்சோந்தி விஜயதாரணியின் கனவில் மண்ணைப் போட்டு விட்டு ஹேட்ட்ரிக் தோல்விக்காக பொன்னாருக்கே சீட்டு கொடுத்து விட்டார்கள்.

எம்.எல்.ஏ வும் போச்சு  எம்.பி.சீட்டும் கிடைக்கலை என்று மனதுக்குள் புலம்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

என்ன! இவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் உண்டு.

நின்று மோசமாக தோற்பதிலிருந்து தப்பித்து விட்டார்கள்/ 

No comments:

Post a Comment